Posts

Showing posts from September, 2014
Image
இன்றைய நாளில் அன்று  (16-09-2000) நடந்தது என்ன? அன்று ஒருநாள் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே நினைத்திருக்கவில்லை. அன் று காலை 9.05 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு நோக்கிப் பறந்து சென்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், தேசிய ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அன்று காலை இறக்காமத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக மேலும் 14 பேருடன் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கொழும்பிலிருந்து 110 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அரநாயக்கப் பகுதியில் இருக்கும் “பைபில் றொக்” (Bibil Rock) மலைப்பகுதியின் மேலாக அந்த ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீர் விபத்துக்குள்ளானது. பலத்த வெடியோசையுடன் தீப்பிழம்பாக வானத்தில் வெடித்துச் சிதறியது. அமைச்சரும் அவருடன் பயணம் செய்த மேலும் 14 ப...
Image
             மின்னலும் சில உண்மைகளும்  ஒரு தடவை மின்னல் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தா க, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது. மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்ச...
Image
        உலகமும் சுதந்திர‌ நாடுகளும்! – அறிய வேண்டிய தகவல்கள்....  உலக நாடுகள் எத்தனை?  உலகத்தில் இன்றைய திகதியில் 196 நாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ( எனினும் தாய்வான் ஒரு தனி நாடாக பல அனைத்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த போதும் “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, தாய்வான் தனது நாட்டின் ஒரு மாகாணம் என உத்தியோக பூர்வமாக அறிவிப்பைக்கொண்டுள்ளது. )...   ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற நாடுகளின் எண்ணிக்கை :  192 நாடுகள் இதுவரை ஐ. நா சபையில் இடம்பெற்றுள்ளன. (1971 ஆம் ஆண்டில் தாய்வான் ஐ. நா சபையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது, எனினும் சீனாவின் தலையீட்டின் பெயரில் இப்போது சீன குடியரசின் கீழ் பதிவிலுள்ளது.) இறுதியாக 14 ஆனி (July) 2011 அன்று தென் சூடான் உறுப்பினராகியது. வத்திக்கான் இதுவரை ஐ. நா சபையில் உறுப்பினர் உரிமை கோரவில்லை.... உலகின் புதிய நாடு எது?  தென் சூடானே இன்றளவில் உலகின் புதிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 9/6/2011 ஒல் சூடானில் இருந்து சுதந்திர...