Posts

Showing posts from September, 2015
Image
ரணில் - மோடி டில்லியில் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்து * ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு - ரணில் * மீனவர் விவகாரம்: இருநாட்டு மீனவர்களும் பேசித்தீர்க்க வேண்டும் - மோடி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் ஆராயப்பட்டிருப்பதுடன், நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றுக் காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்திருந்ததுடன், புதுடில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மீனவர் பிரச்சினை, வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு, கடற்பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்...