
மிரட்டும் இயற்கை மனிதன் தன் மனோ இச்சை அடிப்படையில் தனது வாழ்வொழுங்கை முதலாளித்துவ கொள்கையாக கொண்டு பின்பற்றுவதன் விளைவை இன்று உலக மக்கள் அனுபவித்து வருகின் ... றனர். அதன் தாக்கமாக தற்ப்போது சீனாவில் காற்று மாசுபாடு பெரும் மிரட்டலாக மாறி வருகிறது. இந்த மாதத்தில் 2வது முறையாக மக்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தொழில்துறையில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் வரிசையில் சீனாவும் ஒன்று. அந்நாட்டில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடு மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையால் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சுத்தமான காற்றை பாட்டில்களில் அடைத்து விற்போரிடமிருந்து அதை விலைக்கு வாங்கும் நிலைக்கு சீனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாசு அதிகரித்து வருவதைத் தொடர்ந்தும், புகை மாசு அதிகமாக இருப்பதாலும் முதல்முறையாக, இம்மாத துவக்கத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது கார்களை இயக்க தட...