Posts

Showing posts from June, 2017
Image
கடலையே பாலைவனமாக்கிய 'வளர்ச்சி'..! ஏரல் கடலின் கண்ணீர் கதை! வெ ள்ளைத்தங்கம்’ என்று அழைக்கப்பட்டாலும், பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பல கோடி மக்களின் குருதியில் வளர்க்கப்பட்டதுதான் நவீன வகைப் பருத்தி. ஆப்பிரிக்காவிலிருந்து முன்பு கறுப்பினத்தவர்களைக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்ற வெள்ளையர்கள் தங்களுடைய நாட்டிலிருந்து சிவப்பு நிறத்துணிகளைக் கொண்டுவந்து ஆப்பிரிக்காவில் விற்றிருக்கிறார்கள். அந்தச் சிவப்புநிறத் துணிகளைக் கண்டதும் ஆப்பிரிக்கர்கள் அஞ்சி ஓடினர். அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் குருதியைத்தான் அத்துணிகளில் பூசியுள்ளனர் என அவர்கள் நம்பியதே, அதற்குக் காரணம். ‘இந்த நம்பிக்கை உண்மையல்ல’ எனினும் முழுக்கவும் பொய்யுமல்ல. அன்றும் சரி, இன்றும் சரி... பருத்தி சாகுபடியில் மறைமுகமாக உழவர்களின் குருதி உறிஞ்சப்படுகிறது. இதற்கு இந்தியாவே சிறந்த சான்று. அழிக்கப்பட்ட ‘மஸ்லின்’! இந்திய வேளாண்மை மீதான வன்முறை பருத்தியிலிருந்துதான் தொடங்கியது. பிரிட்டிஷாரின் காலத்தில் இந்தியப் பருத்தியினாலான மஸ்லின் துணிகள், ஐர...