Posts

Showing posts from November, 2014
Image
பனை எண்ணெய் (Palm oil) பயங்கரம்! கா லை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம...
Image
தமிழ் மொழியுரிமை நடைமுறையில் சாத்தியமாகாமைக்கான காரணம் என்ன?  இலங்கை அரசியலமைப்பின் கீழ் இந்நாட்டில் தமிழ் மொழிக்கான  நடைமுறைச் செயற்பாட்டு  உரிமைகள் எவையெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.  ஆனால் நாட்டின் அதியுயர் வழிகாட்டியான குறித்த அரசியலமைப்பின் விதிமுறைகள் பயனற்றவையாக, பயன்படுத்தப்படாதுள்ளவையாக இருப்பதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாத்து அதன் வழிகாட்டலுக்கிணங்க செயலாற்றுவோம் என்று உறுதியுரை மேற்கொண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அரசியல் நிர்வாக அமைப்புகளாகட்டும் அரச அலுவலராகட்டும் தாம் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்தின் படி நடப்பதாகத் தெரியவில்லை. இது யதார்த்த நிலை.   அரசியலமைப்பின் ஒரு அங்கமாகவுள்ள மொழியுரிமை பற்றிய அத்தியாயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றமை, புறக்கணிக்கப்படுகின்றமை அரசியலமைப்பை மதியாத் தன்மையாகவே நோக்கப்பட வேண்டியது. நாட்டின் வழிகாட்டியாகவுள்ள அரசியலமைப்பை மீறிய, மீறிச் செயற்படும் குற்றத்திற்காளாகும் நிலையுள்ளது.  ஆனால் அரசியலமைப்பைப் பேண வேண்டியது பற்றி உரக்கக் குரல் கொடுக்கும் அரசியலமைப்...