
வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்றை இழந்து இருக்கிறது. இஸ்லாத்தின் மீதான இணைப்பையும் , இணக்கத்தையும் மக்களின் மனங்களில் கலையின் மூலம் ஏற்படுத்திய - காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான இசை முரசு இ.எம். நாகூர் ஹனீபா தன் சமூக மறுமலர்ச்சிப் பணிக்கான வேள்வியை இந்த பூமியில் நிறுத்திக் கொண்டு விட்டார் என்பதை அறிவது வேதனை மிக்கது. என்றாலும் - இறைவனிடம் கையேந்தும்படி வலியுறுத்திய அவர்களின் ஆயிரமாயிரம் பாடல் வரிகள் செய்த நற்பணிகளுக்கும் - நல்ல மாற்றங்களுக்கும் உரிய கூலிகளைப்பெற - மகத்தான இறைவன் பால் அவர் திரும்பி இருக்கிறார். அவரது இடைக்காலம் பயணம் இன்றோடு முடிகிறது. எங்கிருந்து வந்ததோ - அங்கேயே அந்த ஆத்மா திரும்பிச் சென்று விட்டது. வல்ல இறைவனே.! எங்கள் வாழ்வையும் பயனுள்ளதாய் இந்த பூமியில் கழித்து முடிக்க அருள் புரிவாய் ஆண்டவனே.!! "இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!" என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை. நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற...