Posts

Image
கடலையே பாலைவனமாக்கிய 'வளர்ச்சி'..! ஏரல் கடலின் கண்ணீர் கதை! வெ ள்ளைத்தங்கம்’ என்று அழைக்கப்பட்டாலும், பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பல கோடி மக்களின் குருதியில் வளர்க்கப்பட்டதுதான் நவீன வகைப் பருத்தி. ஆப்பிரிக்காவிலிருந்து முன்பு கறுப்பினத்தவர்களைக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்ற வெள்ளையர்கள் தங்களுடைய நாட்டிலிருந்து சிவப்பு நிறத்துணிகளைக் கொண்டுவந்து ஆப்பிரிக்காவில் விற்றிருக்கிறார்கள். அந்தச் சிவப்புநிறத் துணிகளைக் கண்டதும் ஆப்பிரிக்கர்கள் அஞ்சி ஓடினர். அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் குருதியைத்தான் அத்துணிகளில் பூசியுள்ளனர் என அவர்கள் நம்பியதே, அதற்குக் காரணம். ‘இந்த நம்பிக்கை உண்மையல்ல’ எனினும் முழுக்கவும் பொய்யுமல்ல. அன்றும் சரி, இன்றும் சரி... பருத்தி சாகுபடியில் மறைமுகமாக உழவர்களின் குருதி உறிஞ்சப்படுகிறது. இதற்கு இந்தியாவே சிறந்த சான்று. அழிக்கப்பட்ட ‘மஸ்லின்’! இந்திய வேளாண்மை மீதான வன்முறை பருத்தியிலிருந்துதான் தொடங்கியது. பிரிட்டிஷாரின் காலத்தில் இந்தியப் பருத்தியினாலான மஸ்லின் துணிகள், ஐர...
Image
உருகி உருக்குலைந்த ரோபோட்டுகள் புகுஷிமா அணு உலையில் தேங்கி இருக்கும் உருகிய எரிபொருளை (molten fuel) எடுத்துவர டெப்கோ நிறுவனம் ஐந்து ரோபோட்டுகளை செய்து உள்ளே அனுப்பியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ரோபோட்டுகள் அவை. வெடித்துச்சிதறிய அணு உலைகளுக்கு அனுப்பப்பட்ட ஐந்து ரோபோட்டுகளும் அங்கே இருந்த வெப்பமும் கதிர்வீச்சையும் தாக்குபுடிக்கமுடியாமல் உருகி உருக்குலைந்து விட்டன என்ற செய்தியை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் டோஷிபா  நிறுவனத்திடம் வேறு மாதிரியான ரோபோட்டுகளை செய்ய சொல்லி பணித்திருக்கிறது டெப்கோ நிறுவனம். அதை செய்வதற்கு எத்தனை காலம் ஆகும் என்று சொல்லமுடியாது. ஏற்கனவே உள்ளே உள்ள பத்து லட்சம் மெட்ரிக் டன் கதீர்வீச்சு பாதிக்கப்பட்ட தண்ணீரை என்ன செய்வது என்று தெரியாமல் ஜப்பானிய அரசாங்கம் முழிபிதுங்கி உள்ளது. அதன் கீழ் பகுதியில் ஒரு frozen wall அமைத்து கட்டு படுத்தமுடியுமா என்று யோசிக்கிறது. அணு உலைகளும் மானுட சமூகமும் ஒன்றாக வாழ முடியாது என்ற கூற்று எவ்வளவு உண்மையானது. அணு சக்தி இல்லா உலகம் படைப்போம்.- பூவுலகின்...
Image
லைபீரிய மோதலும் மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தியும்  அறிமுகம் மனித வரலாற்றில் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஓரு விடயமாகும். மோதல் விட்டுச் சென்ற வடுக்களை புணரமைத்து நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துத்துவது. மிகப்பெரிய சவாலான வி ட யமாகும். இந்த வகையில் மோதல் இடம்பெற்று சமாதானம், மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தி நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் லைபீரியாவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. லைபீரியாவின் மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தி பற்றி அறியும் முன் லைபீரியாவின் முக்கிய குறிப்புகள், மோதலுக்கான பின்னனி என்பவற்றையும் அறிவது அவசியமாகும். இந்த வகையில் முதலில் லைபீரியா தொடர்பான குறிப்புகளை ஆராய்வோம். அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகளாக சியாராலியோன், கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அடலாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இது பூமியின் மத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையைக் கொண்டிருக்கின்றது.  தரைத்தோற்றமும் தேசியக் கொடியும்   மோன்ரோ...