உருகி உருக்குலைந்த ரோபோட்டுகள்

புகுஷிமா அணு உலையில் தேங்கி இருக்கும் உருகிய எரிபொருளை (molten fuel) எடுத்துவர டெப்கோ நிறுவனம் ஐந்து ரோபோட்டுகளை செய்து உள்ளே அனுப்பியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ரோபோட்டுகள் அவை. வெடித்துச்சிதறிய அணு உலைகளுக்கு அனுப்பப்பட்ட ஐந்து ரோபோட்டுகளும் அங்கே இருந்த வெப்பமும் கதிர்வீச்சையும் தாக்குபுடிக்கமுடியாமல் உருகி உருக்குலைந்து விட்டன என்ற செய்தியை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் டோஷிபா நிறுவனத்திடம் வேறு மாதிரியான ரோபோட்டுகளை செய்ய சொல்லி பணித்திருக்கிறது டெப்கோ நிறுவனம். அதை செய்வதற்கு எத்தனை காலம் ஆகும் என்று சொல்லமுடியாது. ஏற்கனவே உள்ளே உள்ள பத்து லட்சம் மெட்ரிக் டன் கதீர்வீச்சு பாதிக்கப்பட்ட தண்ணீரை என்ன செய்வது என்று தெரியாமல் ஜப்பானிய அரசாங்கம் முழிபிதுங்கி உள்ளது. அதன் கீழ் பகுதியில் ஒரு frozen wall அமைத்து கட்டு படுத்தமுடியுமா என்று யோசிக்கிறது.


அணு உலைகளும் மானுட சமூகமும் ஒன்றாக வாழ முடியாது என்ற கூற்று எவ்வளவு உண்மையானது.
அணு சக்தி இல்லா உலகம் படைப்போம்.- பூவுலகின் நண்பர்கள்

Comments

Popular posts from this blog