லைபீரிய மோதலும் மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தியும்
அறிமுகம்
மனித வரலாற்றில் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஓரு விடயமாகும். மோதல்
விட்டுச் சென்ற வடுக்களை புணரமைத்து நிலைத்து நிற்கும் சமாதானத்தையும்
அபிவிருத்தியையும் ஏற்படுத்துத்துவது. மிகப்பெரிய சவாலான விடயமாகும். இந்த வகையில்
மோதல் இடம்பெற்று சமாதானம், மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தி நடைபெற்ற நாடுகளின்
பட்டியலில் லைபீரியாவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
லைபீரியாவின் மோதலுக்குப் பிந்திய அபிவிருத்தி பற்றி அறியும் முன்
லைபீரியாவின் முக்கிய குறிப்புகள், மோதலுக்கான பின்னனி என்பவற்றையும் அறிவது
அவசியமாகும். இந்த வகையில் முதலில் லைபீரியா தொடர்பான குறிப்புகளை ஆராய்வோம்.
அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு
ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகளாக சியாராலியோன், கினி, கோட் டி ஐவரி
ஆகிய நாடுகளும், அடலாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இது பூமியின்
மத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையைக் கொண்டிருக்கின்றது.
தரைத்தோற்றமும் தேசியக் கொடியும்
மோன்ரோவியாவை தலைநகராகக் கொண்ட லைபீரியா ஐக்கிய அமெரிக்காவின் காலனித்துவ
நாடாகும். 1847 ஜுலை 26 இல் அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற
லைபீரியா ஆபிரிக்க அமெரிக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. 2011 சனத்தொகை கணிப்பீட்டின் படி லைபீரியா 4,128,572 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் அரசியல்
முறைமையை அச்சொட்டாகப் பின்பற்றும் லைபீரியாவின் தேசிய கொடியில் இருந்து அரசியல்
நிறுவன அமைப்பும் அமெரிக்க முறையைக் கொண்டதாகும்.
இனி லைபீரிய குடியரசு உருவான விதம் பற்றி ஆராய்வோம்.
லைபீரிய குடியரசின் தோற்றம்
லைபீரியா முழு ஆபிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற
ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவின் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத்
திரும்பியதுபோல் தாயகம் திரும்பிய அமெரிக்க ஆபிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட
நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட அமெரிக்க அடிமைகளின் தாயகம் என
அழைக்கப்படும் லைபீரியா ஆபிரிக்காவில் உருவான முதல் அமெரிக்க காலனித்துவ நாடாகும்.
19ம் நூற்றாண்டில் அமெரிக்க குடியரசை ஸ்தாபித்த வட மானிலங்களுக்கும், தென்
மானிலங்களுக்கும் இடையில் போர் மூண்டது. அமெரிக்க உள்நாட்டு யுத்தம் என
அழைக்கப்பட்ட இவ் யுத்தம் உருவாக பொருளாதாரக் காரணிகள் முக்கிய செல்வாக்குச்
செழுத்துகின்றன. புதிய அமெரிக்க குடியரசான வட மானிலங்கள் முதலாளித்துவப்
பொருளாதாரத்தையுடையன. இதற்கு மாறாக ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பில் தங்கியிருந்த
நிலவுடைமை சார் பொருளாதாரம் இருந்து வந்தது. தெற்கில் நிலவுடைமைப் பொருளாதாரத்தை
அழித்து அங்கே ஐக்கிய அமெரிக்க குடியரசை விஸ்தரிக்கும் நோக்கோடு அன்றைய ஜனாதிபதி
ஆபிரகாம் லிங்கனால் அடிமைமுறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தென்மானிலங்கள் தம்மிடமிருந்க கறுப்பின அடிமைகளை விடுதலை செய்து முதலாளித்துவ
பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தபோது அமெரிக்கப் பிரஜைகளாகப் போகும்
விடுதலை செய்யப்பட்ட கறுப்பின அடிமைகள்
வருங்கால அமெரிக்காவின் அரசியற் சக்தியாக வருவதனை பலர் விரும்பவில்லை. இதனைக்
கருத்தில் கொண்ட முன்னால் அடிமைகளின் எஜமானர்கள் “அமெரிக்கக் காலனித்துவ சங்கம்”
என்ற ஒரு சங்கத்தை உருவாக்கினர். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை தாயகத்தில்
குடியேற்றுவது எனும் குறிக்கோளைக் கொண்ட இச்சங்கம் அதற்கென மேற்கு ஆபிரிக்காவில்
ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா.
1822 இல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னால்
அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.
அமெரிக்கக் காலனித்துவ சங்கத்தால் வாங்கப்பட்ட நிலத்தில் ஏற்கனவே 16 வேறுபட்ட இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.
லைபீரியா என்ற அமெரிக்க காலனி உருவான பின்பு தொடக்கம் இன்றுவரை லைபீரியா பூர்விக
இனமக்கள் அரசியல், பொருளாதார ரீதியாகப் புரக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். மொத்த
சனத்தொகையில் 15 வீதமான
அமெரிக்கக் குடியேரிகளே ஆழும் வர்க்கமாகத் தொடர்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே புதிய குடியேறிகளை பூர்வீக மக்கள் அவநம்பிக்கையுடன்
நோக்கினர். புதிதாகக் குடியேறிய அந்நியர்கள் வினோதமான மொழியை (ஆங்கிலம்) பேசினர்,
விசித்திரமான மதத்தை (கிருஸ்தவம்) பின்பற்றினர். மறுபக்கத்தில் அமெரிக்க
குடியேரிகள் தம்மை மட்டும் நாகரீகமடைந்தவர்களாக கருதிக் கொண்டனர். பூர்வீக மக்களை
நாகரீகமடையாத காட்டுவாசிகள் என அழைத்தனர். பூர்வீக மக்களின் விருப்பங்களைப்
புறக்கணித்து தம் விருப்பப்படி மொன்றோவியாவை (அமெரிக்க ஜனாதிபதி மொன்றோவின்
பெயரால்) தலைநகராகக் கொண்ட லைபீரியக் குடியரசை அமைத்தனர். புதிய தேசத்தின் அரசியல்
நிர்ணயச்சட்டம் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டது. அமெரிக்கக் கொடியைப் போன்ற
தேசியக் கொடி உருவாக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை எல்லாம் அமெரிக்காவில்
இருந்துதான் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன.
லைபீரிய மோதல்
அமெரிக்க லைபீரிய குடியேரிகள் லைபீரியாவிற்கு நாகரீகம் மற்றும் கிருஸ்தவ
மதத்தை நோக்காகக் கொண்டு வந்தடைந்த போது அங்கு 95 வீதமான பழங்குடியினரை சந்தித்தனர். இதன் விளைவாக இந்நாடு
ஒரு தனித்துவமான காலனித்தவ அனுபவத்தைப் பெற்றது. பொதுவாக காவனித்துவத்திற்குப்
பின்னரான நாடுகள் எதிர்கொண்ட பண்புகளான : -
• அரசியல் அடக்குமுறை
• பொருளாதார, நிர்வாக சீர்கேடு
• குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு சலுகைகள்
வழங்கப்படுதல்
• சமூக சீரழிவு என்பவற்றை லைபீரியாவும்
எதிர்கொண்டது.
அமெரிக்க லைபீரிய குடியேரிகள் பல அரசியல் கட்சிகளை உருவாக்கி முறையான வகையில்
பழங்குடி மக்கள் மீது ஆதிக்கம் செழுத்தத் தொடங்கினர். இதில் முக்கியமாக TWP கட்சி (The True Whig Party) தொடர்ந்தும்
தேர்தலில் வெற்றிபெற்று 1877-1980இ1988 வரை அரசியல் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே
லைபீரியா சமூக, பொருளாதார ரீதியாக முரண்பாடுகளுடன் அதிகாரமிக்க ஒரு கட்சி
அரசியலைக் கொண்ட நாடாக 100 வருடங்களுக்கு
மேலாகவூம் நிலைபெற்றிருந்தது.
காலனித்துவத்திற்குப் பிந்திய ஏனைய ஆபிரிக்க நாடுகளைப்போல் அல்லாது லைபீரியா
அதிகார தனியுடைமை பெற்ற ஒரு கட்சி நாடாக விளங்கியது. William Tubman ஆனவர் William Tolbert ஆட்சியேற்கும் வரை 27 வருடங்கள் ஆட்சிபுரிந்தார். William Tubman இன் ஆட்சிக்காலத்தில் லைபீரியாவின் பொருளாதாரம்
அதிகளவாக வெளிநாட்டு மூலதனத்திலேயே தங்கியிருந்தது. இக்காலத்தில் நாடு ‘Firestone Republic’ என பரவலாக வர்ணிக்கப்பட்டது. Tubman இன் கொள்கையானது
வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இரப்பர் தோட்டங்களையும், இரப்பர் உற்பத்தி
விடயங்களையும் ஒப்படைத்தது. இதனால் இந்நாடுகள் லைபீரிய பொருளாதார அரசியலில்
செல்வாக்குச்செழுத்தத் தொடங்கின. இவ்வாராக வெளிநாட்டு மூலதனத்தை நம்பியிருந்த
லைபீரிய பொருளாதாரத்தால் சமூக ஏற்றத்தாழ்வுகள், இளம் குடியேற்றவாதிகள் மற்றும்
பழங்குடி மக்களிடையே மோதல் உருவாகத் தொடங்கியது. சமூக, அரசியல், பொருளாதார
ரீதியில் பழங்குடி மக்கள் வலுவூட்டல் அற்ற நிலையிலேயே 1963 வரையிலும் காணப்பட்டார்கள். 97 வீதமான லைபீரிய பூர்வீக மக்கள் வாக்களிக்க
அனுமதிக்கப்படவில்லை.
லைபீரியா நாட்டினுடைய பாதுகாப்புத் துறையில் உள்ள குறைபாடு காரணமாக Tubman இரகசிய பொலிஸ் படையினரை உருவாக்கி பாதுகாப்புத்
துறையை உளவு பார்த்தார். இந்த இரகசிய பொலிஸ் படையில் அங்கம் வகித்தவர்களில் Samuel Doe, Taylor என்போர்
முக்கியமானவர்களாவர். 1979 இல் அரிசி
விலையேற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட லைபீரிய மக்களை அந்நாட்டு
பாதுகாப்பு படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுவீழ்த்தினர். நவீன காலனித்துவ
கட்டுப்பாடுகளால், அதன் தாக்கங்களினால் லைபீரிய நாட்டில் சிறந்த ஜனநாயக ஆட்சியை
நிலைநிறுத்த இயலாமையால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக 1980 களில் வன்முறை மூலம் இராணுவ ஆட்சி
ஏற்படுத்தப்பட்டது.
இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கியவராக உள்நாட்டு தலைமை இராணுவ அதிகாரி Samuel Doe காணப்படுகின்றார்.
மேலும் நவீன காலனித்துவ நாடுகளின் அழுத்தம் காரணமாக லைபீரியாவில் இராணுவ ஆட்சியை
தொடர்ந்தும் நிலைநிறுத்த முடியாமற் போனது. நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல்
ரீதியாக முரண்பாடுகள் அதிகம் உருவாகியது. Samuel Doe தனது அதிகாரத்தின் மூலம் பல அட்டூழியங்களையும், மோசமான மனித உரிமை மீறலையும்
அரங்கேற்றினார். Samuel Doe வின் இத்தகைய
செயல்கள் லைபீரிய தேசிய பற்றுடைய தேசிய முன்னணியின் National Patriotic
Front of Liberia (NPFL) படையெடுப்பு
மூலம் Samuel
Doe வின் ஆட்சிக்கு எதிராக 1980 களில் ஆயுதக் கிளர்ச்சி இடம்பெற்றது.
இக்காலத்தில் லைபீரிய பெரும்பாண்மை மக்களின் அரசியல் நம்பிக்கை Charles Taylor இன் பக்கம் திரும்பியது. காரணம் நாடு
அனுபவித்துக் கொண்டிருக்கும் நெடுந்துயரத்தை விட்டும் நாட்டை விடுவித்து சமாதானத்தை
கட்டியெழுப்பி சுபிட்சமான வாழ்க்கையை பெற்றுத்தருவதாக அவர் தனது பிரச்சாரங்களில்
மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இதன் காரணமாக 1997 இல் அவர் தேர்தலில் வெற்றியீட்டினார். Taylor இன் ஆட்சியூம் Samuel Doe வின் ஆட்சியைப்போலவே காணப்பட்டது.
மக்கள் மேலும் மேலும் இன்னல்களை அனுபவித்தனர். Taylor சர்வதிகாரப் போக்குடைய ஆட்சியை மேற்கொண்டார். அத்தோடு மட்டுமன்றி நாட்டின் பல
அரசியல்வாதிகளையும் நாடுகடத்தினார். இவரது ஆட்சி கொடுங்கோல் நிறைந்து, ஊழல்
மலிந்து, பொருளாதார வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
Taylor இன் ஆட்சிக்கு எதிராகவூம் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. இறுதியாக லைபீரிய
நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பாக கவனிக்கத்தக்க விடயமானது லைபீரிய வரலாற்றின்
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகள் நாட்டு மக்களை
அடக்குமுறை மூலம் ஆடசிசெய்ய எத்தனித்தனர். 1989 இல் தொடங்கப்பட்ட உள்நாட்டுப் பகையின் காரணமாக பல ஆண்டுகள்
தவரான ஆட்சி நடைபெற்றதால் பல சமூக, பொருளாதார, அரசியல் சீர்கேடுகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்த யுத்தம் நாடு, நாட்டின் தேசிய நிறுவனங்கள் முற்றாக சீரழிந்ததுடன் 14 வருட யுத்தத்தின் விளைவால் 250,000 பேர் இறந்தனர். இவர்களில் பாதிப்பேர் சிவிலியன்களாவர். 500,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். 75 சதவீதம் வறுமையுற்ற மக்கள் உருவாகினர். 10 பேரில் 8 பேர் வேலையற்றோராக
மாறினர். கல்வியறிவு 37 வீதமாகக்
குறைந்தது. நல்லாட்சிக்கான வாய்ப்புகளும் பறிபோனது.
இவ்வாராக இடம்பெற்ற யுத்தத்தின் பாதிப்பில் இருந்து நாட்டை
கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் லைபீரியாவில் இடம்பெற்றது. அதற்காக
பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
யுத்தத்திற்குப் பின்னரான அமைதிப் பேச்சுவார்த்தை
லைபீரியாவின் யுத்தத்திற்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தை கானாவின்
ஆக்ரா (Accra) நகரில் ஜூன் 4, 2003 இல்
இடம்பெற்றது. இப் பேச்சுவார்த்தையின் போது ஐ.நா வின் ஆதரவவு பெற்ற சியராலியோன்
சிறப்பு நீதிமன்றம் லைபீரிய ஜனாதிபதி Charles Taylor மீது போர்க்குற்றம் சாட்டியதுடன் அவரை கைது செய்யவும்
சர்வதேச பிடியானையைப் பிறப்பித்தது. சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் சர்வதேச
மனிதபிமானச் சட்டத்தின் அடிப்படையில் பாரிய போர் குற்றங்களுக்குப் பொறுப்பாக
இருந்த Charles
Taylor பதவி துறக்கக்கோரி ஐ.நா
உடன் ஒப்பந்தமும் செய்துகொண்டது. இப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுடன்
ஆக்ராவில் பேச்சுவார்த்தையில் இருந்த Charles Taylor அவசரமாக நாட்டை வந்தடைந்தார். இக்காலத்தில் இடைக்கால
அரசாங்கம் நிறுவப்பட்டதுடன், அரசாங்கம் மற்றும் பிரதான இரண்டு கிளர்ச்சிக்
குழுக்களுக்கும் இடையில் ஜூன் 17, 2003 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
போர் நிறுத்த காலத்தில் ஜனாதிபதி Charles Taylor தங்கள் நாட்டு
விவகாரத்தில் அமைதி காக்கும் படையை தலையீடு செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம்
வேண்டிக்கொண்டார். இதன் பலனாக ஜூலை 2003 இல் சர்வதேச படைகள் லைபீரியா வந்தடைந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச அழுத்தத்தின்
விளைவாக ஜனாதிபதி Charles Taylor பதவியை உப
ஜனாதிபதி General
Moses Blah கையளித்தார்.
அத்தோடு Taylor
நைஜீரியாவில் புகழிடம் கோரினார். சரியாக ஒரு
கிழமையின் பின்னர் லைபீரிய அரசாங்கத்திற்கும், மோதலின் பிரதான தரப்பான Liberians United for
Reconciliation and Democracy (LURD) மற்றும் Movement for Democracy in Liberia (MODEL) இற்கும் இடையே Comprehensive Peace Agreement (CPA) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தையின் விளைவாக உருவான CPA இனால்
அதிகாரத்தில் இருந்த Charles Taylor வெளியேரவும்,
பொருத்தமான அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை செய்யும் ஒரு பொது உடன்பாட்டை எட்டவும், இடைக்கால
நீதித்துறையை உருவாக்கவும் Charles Taylor இன் புகழிடக் கோரிக்கையும் அனுமதிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு விடயத்திலும்,
இடைக்கால அரசாங்கத்திலும் ஆயுதக் குழுக்கள் இணைக்கப்படக்கூடாது என லைபீரியாவின்
சில சிவில் சமூகக் குழுக்களும் சில அரசியல் கட்சிகளும் வாதிட்டன. ஆனால் இக்
கோரிக்கை மறுக்கப்பட்டு இடைக்கால அரசாங்கத்தில் ஆயுதக்குழுக்களுக்கும், சிவில்
சமூகக் குழுக்களுக்கும் அரசாங்கத்தில் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
லைபீரிய மோதலுக்கு சிறந்த தீர்வைப்பெற Economic Community of West African States (ECOWAS),
European Union, AU, UN, The International Contact Group on Liberia (ICGL) உடன் சில தனிப்பட்ட நபர்களும் குறிப்பாக
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Jimmy Carter உம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தனர். CPA இன் விழைவாக உருவாக்கப்பட்டு
போர் நிறுத்தம், ஆயுதக்குறைப்பு, புணர்வாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு,
பாதுகாப்புத்துறை சீர்திருத்தம், கைதிகள், கடத்தப்பட்டவர்களை விடுவித்தல் போன்ற
செயற்பாடுகளும் An Indepentent National Commission
on Human Rights உருவாக்கப்பட்டு மனித உரிமை பிரச்சினைகள், அரசியல்
பிரச்சினைகள், யுத்தத்திற்குப் பின்னரான புணர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு போன்ற
விடயங்களும் ஆராயப்பட்டன. CPA இன் முக்கிய
பகுதிகளை அமுல்படுத்தும் பொறுப்பு சர்வதேச சமூகத்திடம் வழங்கப்பட்டது. வெற்றிகரமான
உடன்படிக்கை அமுலாக்கத்தினை இவர்கள் உறுதிப்படுத்தினர்.
சமாதான முன்னெடுப்புகளில் இடைக்கால அரசாங்கம் சில சிறப்பு விதிகளை
அமுல்படுத்தியது. லைபீரிய அரசியலமைப்பின் சில விதிகள் இக்காலத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டதுடன் 2006 புதிய ஜனாதிபதி
பதவியேற்புடன் நிறுத்தப்பட்ட விதிகள் செயற்பாட்டிற்கு வந்தன. CPA கையெழுத்தான பின்னர் லைபீரிய இடைக்கால
அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன்
இடைக்கால அரசாங்கம் ஒரு தேர்தலை ஏற்பாடு செய்தது. October 2005 இல் நடந்த தேர்தலில் Mrs. Ellen Johnson - Sirleaf ஜனநாயக ரீதியில் ஜனாதிபதியாக
தேர்வானதோடு ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் என்ற
பெருமையையும் பெற்றார்.
இவ்வாராக இடம்பெற்ற யுத்தத்திற்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தையை
அடுத்து யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெற்றன. அவற்றை ஆராய்வோம்.
லைபீரியாவின் யுத்தத்திற்குப்பின்னரான அபிவிருத்திச் செயன்முறைகள்
முதலாம் கட்டம் (April–July 1997)
லைபீரியாவில் 10 ஆண்டு காலத்தில்
இரு வெவ்வேறு DDRR (Disarmament, Demobilization, Repatriation, Rehabilitation and
Reintergation) செயன்முறைகள்
இடம்பெற்றது. முதலாவது செயன்முறை 1993 இல் Cotonou
Agreement உடன் ஆரம்பமானது.
இவ் ஒப்பந்தம் அனைத்துப் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கியது. போராளிகளுக்கு 1994-1997 ஆண்டுகளுக்கு இடையில் வெவ்வேறு கட்டங்களாக
படைக்கலைப்பு செய்யப்பட்டனர்.
முதல் DDRR செயன்முறை மார்ச் 1994 இல் தொடங்கப்பட்டபோது Charles Taylor மற்றும் அவரது முன்னாள்
கூட்டாளிகளுக்கும் இடையிலான வன்முறை கைவிடப்பட்டது. ஆனாலும் அதற்கடுத்த ஆண்டு
மோதல் உருவாகி பாதி வருடங்கள் நீடித்தது. 1996 இல் The Abuja II Agreement எனும் இரண்டாவது ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு ஆயுதக்
குறைப்பும் உயிர்த்தெழுந்தது, லைபீரிய இராணுவக் கட்டமைப்பும் மறுசீரமைக்கப்பட்டது.
The United
Nations Observer Mission in Liberia மற்றும் The United Nations Humanitarian Assistance Coordination Office என்பன
படைக்குறைப்பு, ஆயதக்களைவு, நிதி மற்றும் மனிதவளத்தை மிகக் கடினமான சூழலில்
சரியாகப் பயன்படுத்தியது. 1996 இன்
இறுதிப்பகுதியில் DDRR செயன்முறைக்கு தேவையான நிதிகள் சரிவர கிடைக்கப்பெறாமையால் DDRR
செயன்முறைக்கு பொறுப்பான அலுவலகங்கள் சூரையாடப்பட்டன. தரவுத்தளங்களும், ஆவணங்களும்
அழிக்கப்பட்டன.
இவ்வாரான நிகழ்வுகள் இடம்பெற்றாலும் 1996 இல் DDRR
செயன்முறை 3 கட்டங்களாக
இடம்பெற்றது. முதலாவது கட்டத்தில் ஆயுதக்கையளிப்புக்காக முன்னாள் போராளிகள் பதிவு
செய்யப்பட்டு, நேர்காணலுக்குற்பட்டு, ஆலோசனையும் வழங்கப்பட்டனர். இரண்டாம்
கட்டத்தில் பாலங்கள் அமைக்கவும், வேலை செய்யவும் போராளிகள் பழக்கப்பட்டு அவர்களது
தொழிற்திறமையும் வளர்க்கப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் சமூக நல்லிணக்கம்
ஏற்படுத்தப்பட்டது. இது மிகவும் சிக்கலாக அமைந்தது. மேலும் போராளிகளுக்கு வேலை
செய்யத் தேவையான உணவுகள், கருவிகள் வழங்கப்பட்டன. அரிசிக்கான கூப்பன், தகரத்தில்
அடைக்கப்பட்ட உணவுகள், இதர உணவுப்பொருட்கள் என்பன ஆயுத ஒப்படைப்புக்கு ஏற்ப
வழங்கப்பட்டது.
தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் மறுவாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு
சமூக நல்லிணக்க முத்திரை, உணவு கூப்பன் அட்டைகள் வழங்கப்பட்டன. DDRR செயன்முறை நாட்டின்
பல்வேறு பகுதிகளில் வெவ்வேரான பதிலைத்தந்தது. நாட்டின் பெரும்பகுதியில் சட்டவிரோத
ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் சில பகுதிகளில் பாதுகாப்புக்
குறைபாடால் DDRR செயன்முறை தாமதமானது. 1997 DDRR செயன்முறையின் இறுதியில் 24,000 போராளிகளில் 33,000 பேர் (74%) DD செய்யப்பட்டனர்.
இவர்களில் 4,306 பேர் சிறுவர் போராளிகளும் 250 பேர் வளர்ந்த பெண் போராளிகளுமாவர். 9,510 இற்கு மேலான ஆயதங்கள் மீளப்பெறப்பட்டது. மேலும் சுற்றிவளைப்பு தேடுதலில் ECOMOG இன் 917 ஆயுதங்கள் பெறப்பட்டன.
இதன் பின்னர் Charles Taylor பதவியேற்றபின்
உருவான மோதலை அடுத்து ஏற்பட்ட யூத்தத்திற்குப் பின்னரான சமாதான செயன்முறை லைபீரிய
வரலாற்றில் இடம்பெற்ற இரண்டாவது சமாதான செயன்முறை ஆகும்.
இரண்டாம் கட்டம் (December 2003–October 2004)
இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தையின் விளைவாக உருவான CPA இன் ஒட்டுமொத்த நோக்கமாக DDRR காணப்படுகின்றது.
இத்திட்டம் இரு கூறுகளாக ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவது DD ஆகும். இதன்போது ஆயுதம்
மற்றும் வெடிபொருட்களை மீளப்பெறல், முன்னாள் போராளிகளை ஆயுதமற்றவர்களாக்குதல்
ஆகும். இரண்டாவது RR ஆகும். இதன்நோக்கமாக பரந்த சமூகத்தில் முன்னாள் போராளிகளை
பயனுள்ள குடிமகனாக மாற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குதல், முறையான கல்வி,
தொழிற்பயிற்சி அத்தோடு சமூக ஒருங்கிணைப்பும் வழங்கப்பட்டது.
DDRR செயற்பாடானது United Nations Mission in Liberia (UNMIL), The United
Nations Development Programme (UNDP), The National Transitional Government of
Liberia (NTGL), The Joint Implementation Unit (JIU) போன்ற நிறுவனங்களின் தலைமையில் அமுலாக்கம்
செய்யப்பட்டு பொறுப்பாக்கப்பட்டது. A National Commission on Disarmament, Demobilization,
Rehabilitation and Reintegration (NCDDRR) என்ற நிறுவனம் NTGL இன் செயற்பாட்டடை
ஒருங்கிணைக்கவும், JIU MDJ UNMIL, NGO, UN அங்கத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்தது. UNDP ஆனது DDRR நம்பிக்கை நிதியத்தின் பாதீட்டில் 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையான்டது. இந் நிதி
European
Commission, USAID மற்றும் The Department for
International Development of the United Kingdom இன்னும் பல
நாடுகளின் உதவியுடன் கிடைக்கப்பெற்றது.
1. DD (Disarmament and Demobilization) செயன்முறை
லைபீரியாவின் DDRR செயன்முறையில் முதலில் DD இடம்பெற்றது. தலைநகர் மொன்றோவியாவின்
பாதுகாப்பு நிலை கருதி ஆயுதக்களைவு விரைவாக இடம்பெற்றது. UNMIL முன்னாள் போராளிகள் மீண்டும் வன்முறையில்
ஈடுபடாதபடி செயற்பட்டது. UNMIL படைகள் மூலம் 13,490 போராளிகள் DD செய்யப்பட்டனர். 8,979 ஆயுதங்கள்
சேகரிக்கப்பட்டன. 2,650 வெடிக்காத எறிகணைகளும், 2,717 இதர வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. UN தலைமையிலான ஆயுதக்களைவு மோதல்
தரப்பான அரசாங்கம் மற்றும் இரு கிளர்ச்சிக்குழுக்களுக்கும் ஒரே சமயத்தில்
ஆயுதக்களைவு செய்தது. இச்செயன்முறை நம்பிக்கையை வளர்க்கும் ஏற்பாடாக விளங்கியது.
லைபீரிய அரசியல் குழுக்களுக்கும் நாட்டினது பிரச்சினை தொடர்பான ஆழமான அறிவு
இருக்கவில்லை. மேலும் மோதல் தரப்புகளிடமிருந்தும் நாட்டின் அரசியல்
அபிவிருத்திக்கு தேவையான சரியான தகவல்களை பெறமுடியவில்லை. ஆனாலும் CPA திட்டம்
லைபீரியாவில் வெற்றியளிக்கக் காரணம் UN மற்றும் NGOகள் சமாதான செயன்முறைக்கு அர்ப்பணிப்புடன்
செயற்பட்டமையே ஆகும். மேலும் இத்திட்டத்தை செயற்படுத்த ஆயுதமேந்திய பிரிவூகள்,
அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்களுக்கு UNMIL அங்கத்துவம்
வழங்கவில்லை. மேலும் UNMIL சமூக வானொலி சேவையை
உருவாக்கி வெற்றிகரமான DDRR தகவல்கள், கல்வி, தொடர்பாடல், பொதுத்தகவல்களை
வழங்கியது.
Charles Taylor இன் படைகளுடன்
இணைத்து அனைத்துப்படைகளும் ஏப்ரல் 15, 2004 இலிருந்து
நாளொன்றுக்கு 250 வீரர்கள் DD செய்யப்பட்டனர். இவ்வாராக 2005 மார்ச் இற்கு இடையில் 101,495 போராளிகள் விடுவிக்கப்பட்டனர். சாதாரண பொதுமக்களும் நன்மைகளைப் பெற தாங்களும்
போராளிகள் எனப்பதிவு செய்தனர். இதனால் UNMIL இதற்கு
துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினமானது. இதன் பின்னர் நியதிகளின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு HIV/AIDS பால்நிலை நோய்க்கான விழிப்புணர்வுகள், நோய்க்காப்புகள், மருத்துவ உதவிகள், 300 அமெரிக்க டொலர் பணம், ஒரு மாத காலத்துக்கு
தேவையான உணவு என்பவற்றுடன் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான போக்குவரத்து
ஏற்பாடுகளும் வழங்கப்பட்டன.
சிறுவர் போராளிகளில் 8,532 ஆண்களும் 2,440 பெண்களும் DD
செய்யப்பட்டனர். இதற்கு UNICEF சிறந்த பங்களிப்பை வழங்கியது. அவ்வாரே 22,370 பெண் போராளிகள் The United Nations Population Fund (UNFPA) உதவியுடன் DD செய்யப்பட்டனர்.
2. RR (Rehabilitation and Reintegration) செயன்முறை
முன்னாள் போராளிகளுக்கு RR செய்வது DDRR திட்டத்தில் தனிப்பகுதியாக
முன்னெடுக்கப்பட்டது. புணர்வாழ்வளித்தலின் நோக்கமாக உளவியல் ஆலோசனைகளை வழங்குதல்,
தொழில் மற்றும் கல்விப் பயிற்சிகளை வழங்கி சமூகத்திற்கு இயைபானவர்களை
உருவாக்குதலாகும். மீள ஒருங்கிணைத்தலின் நோக்கமாக போராளிகளை அவர்களது குடும்பம்
மற்றும் சமூகத்துடன் இணைப்பதாகும். UNMIL தகவல்களின் படி
முன்னாள் போராளிகளில் 98% DD
செய்யப்பட்டனர். அவர்களில் 90% RR இல் கலந்து
கொண்டனர். புணர்வாழ்வளித்தல் செயன்முறை மூலம் 3 கட்டங்களாக கல்வி வழங்கப்பட்டது. அவை முதனிலை,
ஆரம்பக்கல்வி, இரண்டாம்நிலை, உயர்கல்வி, பல்கலைக்கல்வி ஆகும்.
முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள், விவசாயம், வாகன இயந்நிர பழுது
பார்த்தல், உணவு, தயாரித்தல், தையல், மேசன் தொழில், சாயமிடல் என்பன வழங்கப்பட்டன.
இப்பயிற்சிகள் முன்னாள் போராளிகளின் தெரிவின் அடிப்படையில் வழங்கப்பட்டது. 40% கல்வியையூம் 60% தொழிற்பயிற்சியையும் தேர்ந்தெடுத்தனர். The Joint
Implementation Unit (JIU) 15 புணர்வாழ்வுத் திட்டத்திற்கு ஒப்புதல்
அளித்தது. இதற்கு USAID, EU என்பன அனுசரனை
வழங்கியது.
RR இன் மிக முக்கிய நோக்கமாக உளவியல் ஆலோசனை அமைந்தது. ஏனெனில் மோதல் காலத்தில்
குழந்தை போராளிகளுடன் சேர்த்து அனைத்துப் போராளிகளும் வலிமை, வீரத்திற்காக
மரிஜூவானா, கொக்கெய்ன் மற்றும் கடுமையான போதைப்பொருட்களை பாவிக்க
நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் பாவனையால் அடிமைப்பட்டவர்களை விடுவிக்க இவ் உளவியல்
ஆலோசனை உதவியது.
3. பாதுகாப்புத்துறை
சீர்திருத்தம்
சமாதானத்தை ஏற்படுத்துபவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்களின்
மிகப் பிரதானமான சவாலாக முன்னாள் போராளிகளை சிவில் சமூகத்துடன் இணைத்தல் அல்லது
இராணுவத்தில் இணைப்பதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதாகும். யுத்தத்திற்குப் பின்னர்
முழு நாட்டினது பாதுகாப்புத்துறையை சீர்திருத்துதல் யுத்தத்திற்குப் பின்னரான
அபிவிருத்தியில் ஒரு முக்கிய, சிக்கல் மிகுந்த பகுதியாக உள்ளது. முன்னாள் மோதல்
இடம்பெற்ற நாடுகள் யுத்தத்திற்குப் பின்னர் பாதுகாப்பு அற்றுக் காணப்படுமாயின்
அங்கு மீண்டும் மோதல் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதுகாப்புச்
செயன்முறையானது ஜனநாயக நெறிகளின் அடிப்படையில் நிலையானதாகவும், நல்லாட்சித்
தத்துவத்தின் அடிப்படையிலும் காணப்பட வேண்டும்.
Charles Taylor இன் அரசாங்கம் தேசிய பாதுகாப்புக் கொள்கையில்
தோல்வியடைந்ததனால் 1999 இல் மீண்டும்
மோதல் உருவாகியது. இதனால் லைபீரியாவின் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமன்றி மனித
பாதுகாப்புக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய புதிய அரசாங்கம் தலைப்பட்டது. DDRR வெற்றிகரமாக
இடம்பெற்றதிலிருந்து பல சட்டவிரோத ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. மேலும் மக்கள் தனிப்பட்ட
பாவனைக்காக வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் புதிதாகத்
தேர்வான ஜனாதிபதியால் வலுவான தேசிய படையையும், பாதுகாப்புக் கொள்கையும் உருவாக்கப்பட்டது.
சிவிலியன்கள் ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
யுத்தத்திற்குப் பின்னரான லைபீரியாவில் பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்திற்கு
தடையாக 1986ம் ஆண்டைய யாப்பு
காணப்பட்டது. இவ்யாப்பு ஜனாதிபதிக்கு அணைத்துத் துறைகளுக்கும் சட்டங்களை
உருவாக்குவதற்கான அதிகாரத்தை வழங்கியது. இவ் ஏற்பாடுகளும் சீர்திருத்தப்பட்டன.
மேலும் லைபீரியாவின் பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்தில் அமெரிக்கா சிறந்த
பங்களிப்பை வழங்கியது. UNMIL லைபீரிய தேசிய பொலிஸ் படையில் பல
சீர்திருத்தங்களை கொண்டுவந்தது. அவை:-
- 1997 தேர்தலுக்குப் பின்னர் Charles Taylor இன் அனுசரனையில் சேவையில் இணைந்த பொலிசார் மீண்டும் தேசிய பொலிஸ் படையில் இணைய தகுதி இல்லை.
- மனிதஉரிமை துஸ்பிரயோகம் செய்தார்கள் எனும் பதிவு இல்லை என்பதனை உறுதிப்படுத்தல்.
- தேசிய பொலிஸ் படைக்கான ஆட்சேர்ப்பானது பால்நிலை சமத்துவம், இன சமத்துவம், புவியியல் சமத்துவம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.
4. லைபீரியாவின்
நீண்டகால அபிவிருத்தி அனுகுமுறை
யூத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி என்பது மனிதபிமான உதவிகள் முலம் உணவு,
உடை, தற்குமிடம், மருத்துவ உதவி என்பன வழங்குதலாகும். இதற்காக பல மனிதபிமான முகவர்
அமைப்புகள் செயற்படுகின்றன. குறுகிய கால அபிவிருத்தி இலக்கு அடிப்படையில்
இந்நிறுவனங்கள் DDRR செய்யப்பட்ட போராளிகளுக்கும், அகதிகள், உள்ளுரில்
இடம்பெயர்ந்தோர், சிறுவர் போராளிகள் என்போருக்கு தற்காலிக வதிவிடங்களை
வழங்குகின்றது. ஆனால் இவ் அணுகுமுறையால் நீடித்த உத்தரவாதப்படுத்தப்பட்ட
சமாதானத்தை வழங்க முடியாது. இதனால் குறுகிய கால அபிவிருத்தி இலக்கில் இருந்து
நீண்ட கால அபிவிருத்தி இலக்கினை அடைய கல்வியறிவை அதிகரித்தல், வறுமைக் குறைப்பு,
வளர்ச்சியடையாத பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை களைதல் அவசியமாகும்.
யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் சமூக ஒருங்கிணைப்பு இரண்டு
விடயங்களில் பார்க்கப்படுகின்றது.
1) சமூக
ஒருங்கிணைப்பு
2) பொருளாதார
ஒருங்கிணைப்பு
சமூக ஒருங்கிணைப்பு என்பது மனிதஉரிமை துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட காயங்களை
குணப்படுத்துவதாக அமையும். அது போலவே லைபீரியாவில் முன்னாள் போராளிகளை சமூகத்துடன்
ஒன்றிணைக்க சமய அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இம்மத அமைப்புகள் மக்கள் மத்தியில்
சகோதர சிந்தனைகளைப் பரப்பியது. மேலும் இவ்அனுகுமுறை செயற்பாடுகள் மூலம் Truth and
Reconciliation Commission முன் மோதல்
குற்றவாளிகள் பலர் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களது
குற்றங்களும் மன்னிக்கப்பட்டன. நாட்டின் நீதித்துறை குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்கு
ஒரு மாற்றுத்தீர்வு வேண்டும் என கேட்டது. ஆனால் நடைமுறை அரசாங்கம் சமரச
அடிப்படையிலேயே நல்லிணக்க செயற்பாட்டைக் கொண்டுசென்றது. மேலும் மனித குலத்திற்கு
எதிரான குற்றத்திற்காக Charles Taylor கைது செய்யப்பட்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட்டும் வருகின்றார்.
பொருளாதார ரீதியிலான நல்லிணக்கம் என்பது அரசானது சொத்துக்களை இழந்தவர்களுக்கு,
உறவினர்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுதல் வேண்டும்
எனக்குறிப்பிடுகின்றது. இவ் இழப்பீடு வழங்கப்படுதலானது குறுகிய மற்றும் நீண்ட கால
அபிவிருத்திக்கு பாதுகாப்பைத் தரும் ஒன்றாகும். ஏனெனில் மோதல்கள் குறுகிய கால
திருப்தியிண்மையாலே அதிகம் உருவாகின்றன. இதனால்
லைபீரிய அரசானது அதன் மக்களுக்கு மோதலுக்குப் பின்னரான குறுகிய கால தொழில்
மற்றும் வாழ்வாதாரங்களை வழங்கியது. ஆனாலும் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு நீண்ட
கால அபிவிருத்தியே அவசியமாகும். இதுவே நிலையான சமாதானத்திற்கு வழிவிடும். இதற்காக
லைபீரியாவில் அரசு கல்வித்திட்டங்களுக்கு அதிக முதலீடுகளைச் செய்தது. பாடசாலைகளையும்
கட்டியது. மேலும் முன்னாள் போராளிகள் பலர் முழுமையான பல திறமைகளுடன் பொருளாதார
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மூலம் வாழ்வாதாரத்தைப் பெற முடியாது. இது மேலும்
மேலும் மோதலேயே ஏற்படுத்தும். பாதுகாப்பு இல்லாமல் அபிவிருத்தியை அடைய முடியாது.
அதே சமயம் அபிவிருத்தி இல்லாமல் பாதுகாப்பு நிலைக்காது இதனாலேயே அபிவிருத்திஇ
பாதுகாப்பு இரன்டும் லைபீரியாவில் ஒரே சமயத்தில் இடம்பெற்றது.
5. யுத்தத்திற்குப்
பின்னரான பொருளாதார அபிவிருத்தி
அபிவிருத்தி என்பது சமூக எதார்த்தத்தை மேம்படுத்துவதும் மனிதனுடைய நல்வாழ்வை
உறுதிப்படுத்துவதுமாகும். யுத்தத்துக்குப் பின்னரான பொருளாதார மறுசீரமைப்பு என்பது
யுத்தத்திற்குக் காரணமான அநியாயமான பொருளாதார மற்றும் சமூக நிலையினை
மறுசீரமைப்பதாகும். இப்பிரச்சினை மனித மூலதனக்குறைவு, உள்ளக உட்கட்டமைப்பு அழிவுடன்
தொடர்பானது. வன்முறை மோதல் நிறுத்தப்பட்டவுடன் பொருளாதார அபிவிருத்தியை
மேற்கொள்வது சவாலான ஓர் விடயமாகும்.
பொருளாதார சீரமைப்பானது அழிவடைந்த போக்குவரத்து, தொடர்பாடல், வங்கி,
சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் விவசாயம் போன்ற அமைப்புகளை
மீளக்கட்டமைப்பதாகும். இது நீண்ட செயன்முறை ஆகும். இத்தோடு யுத்தத்தால் பாதிப்படைந்த
நிலங்கள், ஏனைய வளங்கள் பலவீனமடைந்த சமூகத்திறன் என்பவற்றையும் மீட்டல் இதன்
பொருளாகும். வன்முறையினால் உருவான பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க விவசாயம்,
உற்பத்தி மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களை அமைப்பதன் மூலம் சேமிப்பு பெருகும், சூழலுக்கு இணக்கமானதாக
நிலைத்து நிற்கும் அபிவித்தி ஏற்படும் அத்தோடு உள்நாட்டுத் திறனும் அதிகரிக்கும்.
லைபீரியாவில் யுத்தத்திறகுப் பின்னரான அபிவிருத்தியில் பல்வேறு பொருளாதார
அபிவிருத்திகள் இடம்பெற்றன. அதிகளவான வெளிநாட்டு நிறுவனங்கள் லைபீரியாவின்
பொருளாதார அபிவிருத்திக்கு முதலீடுகளைச் செய்தது. மேற்கு ஆபிரிக்க
துணைப்பிராந்தியத்தின் கடல் நுழைவாய் துறைமுகத்தைக் கொண்ட லைபீரியா இயற்கை வளமான
இரும்புத்தாது, மரம், வைரம், தங்கம், நீர்வளம் கொண்ட நாடாகும். அத்தோடு இரப்பர்,
கோப்பி, கொக்கோ, அரிசி, மரவள்ளி, பாம் எண்ணெய், கரும்பு போன்ற உற்பத்திகளுக்கும்
சிறந்த இடமாகவுள்ளது.
யுத்ததத்திற்குப் பின்னரான லைபீரியாவில் வணிக வளர்ச்சிக்கு ஸ்திரமான அரசியல்
சூழல் நிலவுவதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்ய முன்வந்தன.
அரசாங்கமும் முதலீட்டு ஊக்குவிப்பாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில்
வலுவான சட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியது. இந்த வகையில் முதலீடுகளைச் செய்த
நாடுகளாக -
- லக்ஸம்பேர்க் இரும்பு உற்பத்திக்கும், சுரங்க அகழ்வுக்குமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது. அத்துடன் 1,500 லைபீரியர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியது.
- கனடா இறப்பர் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை உரிக்கும் தொழிலுக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது.
- சீனா சுரங்க அகழ்வுக்காக 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது. அத்துடன் 2000 லைபீரியர்களுக்கும் நேரடி வேலை வாய்ப்பை வழங்கியது.
- American-Liberia Mineral Company (AMLIB) நிறுவனம் தங்கம் மற்றும் வைர அகழ்வுகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது. மேலும் 700-1000 லைபீரியர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியது.
- மலேசியா விவசாய வேளாண்மை, இறப்பர் மற்றும் பாம் எண்னெய் உற்பத்திக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது. மேலும் 1000 லைபீரியர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியது.
- அமெரிக்க கோடிஸ்வரர் Robert L. Johnson அவரது Liberia Endowment Development Fund Company (LEDFC) நிறுவனத்தின் மூலம் தலைநகர் மொன்ரோவியாவில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்க முதலீடுகளைச் செய்தார்.
- 25 வருட கணிய வள அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் Offshore Oil Exploration Accord உருவாக்கப்பட்டது. இதன் மூலம் Chevron Corporation எனும் அமெரிக்க எண்னெய் நிறுவனம் லைபீரியாவின் கடற்பரப்பில் எண்னெய் அகழ்வுக்காக 10 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது.
- லைபீரிய அரசு Golden Veroleum Inc. எனும் நிறுவனத்துடன் இணைந்து பாம் எண்னெய், ஆலைத்தொழில் என்பவற்றுக்காக 1.6 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்தது. அத்தோடு 35,000 லைபீரியர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியது.
- Firestone நிறுவனம் லைபீரியாவில் 80 வருடங்களாக இறப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றது. யுத்ததத்திற்குப் பின்னர் 200 சதுர மைல் பரப்பில் உலகின் மிகப்பெரிய இயற்கை இறப்பர் தோட்டத்தினை லைபீரியாவில் இந் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இவ்வாராக யுத்ததத்திற்குப் பின்னரான லைபீரியாவின் பொருளாதார வளர்ச்சி
காணப்படுகின்றது.
6. தேசிய இயலுமைமைக்
கட்டியெழுப்புதல்
லைபீரியாவின் அரசாங்கம் 7 வருடங்களாக
இன்றும் யுத்ததத்திற்குப் பின்னரான அபிவிருத்தி நிலையிலேயே உள்ளது. லைபீரியாவில்
நாட்டின் உட்கட்டமைப்பு, பொது நிறுவனங்கள், கல்வி, நீதித்துறை, பொதுப்பிரிவூகள்,
சுகாதார அமைப்புகள் என்பவற்றின் இயலுமை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று
கூறப்படுகின்றது. UNDP ஆனது தனிநபர்கள்,
நிறுவனங்கள், கல்வி நிலையை கட்டியெழுப்புதல் மூலம் லைபீரியாவில் தேசிய இயலுமையை
அதிகரிக்க முடியும் என்றது.
தேசிய இயலுமையை கட்டியெழுப்புதல் தேசிய மற்றும் உள்ளுர் மட்டத்தில் இடம்பெற
வேண்டும். இவற்றுள் நாட்டை முகாமை செய்யும் திறனை அதிகரித்து வலுவூட்டுதல்
(அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பொது ஊழியர்கள், அமைச்சர்கள்) நாட்டின்
விவகாரங்களை முகாமை செய்யூம் விதிகளையும் வழிகாட்டியையும் உருவாக்குதல் இவற்றின்
மூலம் நாட்டின் தலைமைத்துவம், தேசிய நலன், நிர்வாக இயலுமையை அதிகரித்தலாகும்.
இவ்வாரே லைபீரியாவில் ஊழலற்ற அல்லது வெளிப்படையான ஒரு அரசாங்கத்தைக் கொண்டு
நடாத்துவதற்குத் தேவையான வழிவகைகளை அந்நாடு அமைத்துக்கொண்டது. 2005 இல் The General Auditing Commission (GAC) எனும் அலுவலகம் உருவாக்கப்பட்டு லைபீரியாவின்
பொது நிறுவனங்களின் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தண்மையை அதிகரிப்பதற்கான
வழிவகைள் செய்யப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவைத்
திணைக்களங்கள் காலா கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்கப் பணிக்கப்பட்டனர். இவ்வாரான
அறிக்கைகளை office of the Auditor-General Independent எனும் நிறுவனம் ஆராய்ந்து இலாகாக்களின் பலம்,
பலவீனம், முன்னேற்றத்திற்கான வழிவகைகள் பற்றி ஆராயும். இவ் ஏற்பாடுகள் கணக்காய்வுகளில்
துல்லியத் தண்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இவ் ஏற்பாடுகள்
அல்லது கட்டுப்பாடுகள் நிர்வாக மோசடி, நிதி மோசடி, பொது வழங்களை துஸ்பிரயோகம்
செய்தல், ஊழல் ஏற்படுதலைக் குறைத்து ஆட்சியில் வெளிப்படைத் தண்மை, பொருப்புடைமை,
மக்கள் நம்பிக்கை, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அதிகரிப்பதோடு ஜனநாயகத்தையும்
ஏற்படுத்தும் என லைபீரியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
7. லைபீரியாவில்
சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதலானது இராணுவம் மற்றும்
பாதுகாப்பு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றது. இவ் இராணுவம் மற்றும்
பாதுகாப்பு நிறுவனங்கள் பொதுச்சூழல், பொதுப்பாதுகாப்பு, மனிதப்பாதுகாப்பு,
பொருப்புடைமை, நீதித்துறையின் வெளிப்படைத்தண்மை என்பவற்றை செயற்படுத்துவதாக
உள்ளது. மேலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தலானது -
- · அரசியல் அமைப்பு விதிகள்
- · சட்பூர்வ அதிகார வரையரைகள்
- · சிவிலியன் அதிகாரம்
- · சட்டமன்ற மேற்பார்வை
- · மூன்றாம் கண் ஆட்சி (ஊடகம், சிவில் சமூகம், பாரம்பரிய நெறிகள்)
- · பொதுமக்கள் மூலோபாய முகாமைத்துவம்
என்பவற்றை மேம்படுத்துவதாகவும் உள்ளது. இவ்வாரே லைபீரிய யாப்பு
அரசாங்கத்திற்கு அடிப்படை சட்ட அந்தஸ்தை வழங்குகின்றது. யாப்பானது ஜனநாயக அரசியல்
தலமைகளுக்கு, நிர்வாகத்திற்கு, சட்ட உறுப்பினர்களுக்கு, நீதித்துறை நிபுணர்களுக்கு
வலிமையை வழங்க வேண்டும்.
லைபீரியாவின் யாப்பு முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறையைக் கொண்டதாகக்
காணப்பட்டது. யாப்பின் 4ம் அத்தியாயம் 50வது சரத்து ஜனாதிபதிக்கு இராணுவம் மற்றும்
பாதுகாப்பு நிறுவனங்கள் உற்பட ஏனைய நிறுவனங்களுக்குமான முழு அதிகாரத்தை வழங்குகின்றது.
மேலும் அவரால் முழுமையான ஆயுதக்கட்டுப்பாட்டை நிர்வகிப்பதோடு பாதுகாப்பு அமைச்சர்,
நீதி அமைச்சரையும் நியமிக்கும் அதிகாரம் உண்டு. 2006ம் ஆண்டைய லைபீரிய தேர்தலை அடுத்து ஒரு நம்பகமான அரசியல்
தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது. அத்தோடு யாப்பிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
யாப்பு மாற்றத்தில் இதுவரை காலமும் ஜனாதிபதி அனுபவித்து வந்த அதிகாரங்கள்
குறைக்கப்பட்டன. அத்தோடு ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு வரம்பும் உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதி உற்பட அனைத்து அரசியல் தலைவர்களும் யாப்பினது சட்டத்திற்கு கீழ்ப்படிய
பணிக்கப்பட்டனர். மேலும் நீதி அமைச்சர், தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள், குடிவரவு ஆணையாளர்,
பொலிஸ் தலைமை அதிகாரிகள் நியமனங்கள் உற்பட சட்டமன்ற குழுக்களும் பொதுமக்கள்
நியமனங்கள் மூலமே நியமிக்கப்பட்டனர். இவ் ஏற்பாடுகள் இராணுவம் மற்றும் பாதுகாப்பு
நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றவே உருவாக்கப்பட்டது.
8. லைபீரிய யுத்தத்திற்குப்
பின்னரான அபிவிருத்தியில் சிவில் சமூகத்தின் பங்கு
சிவில் சமூகமானது மூன்று முக்கிய பாத்திரங்களை வகிக்கின்றது. அவையாவன ஜனநாயக
அரசாங்கத்தில் மாற்றத்தின் முகவராக செயற்படுதல், காவல் நாயாக செயற்படுதல், தொழிநுற்ப
வளத்தினை உற்புகுத்தல் என அடையாளப்படுத்தப்படுகின்றன. மேலும் சிவில் சமூகமானது
ஜனநாயக அரசின் பொருப்புடைமை, வெளிப்படைத் தண்மை, பங்குபற்றுதலை விருத்தி
செய்கின்றன.
லைபீரிய வரலாற்றில் பல துடிப்பான சிவில் சமூகங்கள் செயற்பட்டுள்ளன. Charles Taylor இன் சர்வதிகார ஆட்சியில் இவை அதிகார ரீதியில்
அடக்கப்பட்டன. Taylor அரசியலையும்,
சிவில் சமூகத்தையும் வேறுபடுத்தி நோக்கினார். அரசாங்கத்திற்கு எதிராக இருந்த
சிவில் சமூக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல
சித்திரவதைகளுக்கும் துன்புருத்தலுக்கும் உள்ளானர்கள். இதனால் நாட்டின் சமூகங்கள்
பலவீனமடைந்து துயரங்களை எதிர்நோக்கினர்.
Accra பேச்சுவார்த்தையின்
போது CPA விஞ்ஞாபனம் சிவில் சமூகங்களை வலுவூட்டுதல்
பற்றிய ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது. வெறும் காவல் நாயாக இருந்த சிவில் சமூகங்கள் CPA
அமுலாக்கப்பட்டதன் பினனர் இடைக்கால அரசாங்கத்தின் நேரடி நடிகர்களாக மாறினர்.
இடைக்கால தேசிய பாராளுமன்றின் 76 ஆசனங்களில் 7 ஆசனங்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமாதான
செயற்பாடு மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் CPA அமுலாக்கத்தினை
மேற்பார்வை செய்யும் பொருப்பையும் பெற்றனர். 22-24 மார்ச் 2005 இல்
லைபீரியாவில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் 115 பேரை இணைத்து 3 நாள் மாநாடு நடாத்தப்பட்டது. மாநாட்டில் இவர்களுக்கு சமூக அபிவிருத்தி, மனித
அபிவிருத்தி, மனித உரிமை பிரச்சினை பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும்
அனைத்து சிவில் சமூகத்தினரையும் இணைத்து National Coalition of Civil Society Organisations
in Liberia (NACCSOL). என்ற சிவில்
சமூக கூட்டிணைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வாராக உலக நாடுகளின் முழு அனுசரணையுடன் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின்
உதவியுடன் லைபீரியாவில் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி இடம்பெற்றாலும்
நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனை ஐக்கிய நாடுகள் சபை
கண்டறிந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை இனி நோக்கலாம்.
9. லைபீரியாவும் யுத்தத்திற்குப்
பின்னரான சவால்களும்
லைபீரியாவில் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் பல்வேறு சவால்கள்
தீர்க்கப்படாமல் இன்றும் தொடர்ந்த வன்னமே உள்ளது. அப் பிரச்சினைகளாக பின்வருவன
அடையாளப்படுத்தப்படுகின்றன.
1. போலிஸ் படைக்கு
போதிய ஆதரவிண்மை
லைபீரியாவின் போலிஸ் படை இன்னும் போதிய விணைதிரனான முகாமைத்துவமின்மை,
உபகரணப்பற்றாக்குறை, சமூக ஆதரவு இன்றியே காணப்படுகின்றது. பொதுமக்களை
துன்புருத்தல், தவரான ஒழுக்க சம்பவங்களால் பொதுமக்களுக்கும், பொலிஸ்
படைக்கும் இடையில் ஒரு வழுவான உறவைக்
கட்டியெழுப்புதல் லைபீரிய அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது. மேலும் 850 பொதுமக்களுக்கு 1 பொலிஸ் என்ற விகிதத்தில் நாட்டின் பாதுகாப்பு
காணப்படுகின்றது. The Emergency Response Unit பிரிவுக்கு 500 அதிகாரிகள் கட்டாயத் தேவையில் இருக்கையில்
தற்பொழுது 321 பேரே உள்ளனர்.
இவற்றை நிறைவு செய்ய பெரிய அளவில் நன்கொடை ஆதரவு தேவைப்படும் நிலையில் UNMIL அதற்கான உதவிகளை நிதிகளை வழங்கி வருகின்றது.
லைபீரியாவில் 8000 வலிமையான போலிஸ்
படையை உருவாக்கும் திட்டத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.
2. பாலியல் மற்றும்
பாலின அடிப்படையிலான வன்முறைகள் பரவுதல்
லைபீரியாவில் 14 வருட சிவில் யுத்தத்தில்
65% பெண்கள் பாலினம்
சார்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மீட்புத்திட்டங்கள் பற்றிய
ஆய்வில் லைபீரியாவில் வீட்டு வன்முறைகள் மற்றும் கற்பழிப்பு உயர் விகிதத்தில்
இருப்பதாக அறியப்பட்டுள்ளன. லைபீரிய தேசிய போலிஸ் அறிக்கையில் அதிகளவாக 10
- 19 வயதிற்குற்பட்ட பெண்களே
இதில் அதிகளவு பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 இல் லைபீரிய அரசு UNDP உடன் இணைந்து பாலின அடிப்படையிலான வன்முறையில் 30% ஆன வன்முறையை 2011 இற்குள் குறைத்தது. இதற்காக விஷேட நீதிமன்றங்களும்
உருவாக்கப்பட்டன.
இவ்வாரான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் ஐ.நா சபை நடாத்திய ஆய்வில் இவ்
குற்றவியல் நீதிமன்றத்தினூடாக சமகால வன்முறையின் வேகத்தை கட்டுப்படுத்த
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகலாம்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
3. பிராந்திய
ஸ்திரத்தண்மையின்மை
லைபீரியா தனது உள்நாட்டில் மோதலை எதிர்கொண்டதோடு தனது எல்லைப்புற நாடுகளிலும்
மோதலுக்கு முகம்கொடுத்தது. Cote d’Ivoire இன் எல்லைப்புற பகுதிகளில்
லைபீரியாவின் கிளர்ச்சிப் படைகள் ஊடுருவதால் பல தகராருகள் எல்லைப்பகுதிகளில்
ஏற்பட்டன. இவை லைபீரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததோடு 190,000 அகதிகள் உருவாகவும் காரணமாக இருந்தது. 37,000 பேரின்
எல்லைப்புற குடியிருப்பு வளங்களும் நாசப்படுததப்பட்டது.
UNMIL மற்றும் லைபீரிய
அரசும் இணைந்து Cote d’Ivoire இன் எல்லைப்புற
பகுதிகளில் லைபீரிய கிளர்ச்சிப் படைகள் ஊடுருவ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.
மேலும் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டது. 2012 ஜூன் நடந்த எல்லை தாண்டிய தாக்குதலில் 7 UN அமைதிப்படையினர் உற்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இதன் விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது
செய்யப்பட்டனர். இன்றும் எல்லை தாண்டும் கிளர்ச்சிக்காரர்களை கட்டுப்படுத்துவது லைபீரிய
அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
4. மனித மற்றும்
போதைப்பொருள் கடத்தல்
லைபீரியாவில் ஹெரோயின், கொக்கைய்ன் போன்ற போதைப்பொருள் கடத்தல்
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெருகின்றது. உள்நாட்டில் ஏனைய விவசாய
நடவடிக்கைகளுக்குப் பதிலாக மரிஜூவானா உற்பத்தி உற்பத்தி மலர்ச்சி கண்டுள்ளது. 2011 மே இல் லைபீரிய அரசு ஏனைய மேற்கு ஆபிரிக்க
நாடுகளுடன் இணைந்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிராந்திய
நடவடிக்கைத் திட்டங்களை வரைந்தது. லைபீரிய தேசிய போலிஸ் இக்குற்றங்களை தடுக்க பல
நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஆனாலும் நாட்டில் ஊழல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள்
விற்பனை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
5. பாலின மற்றும்
சமூகப் பாரபட்சம்
சமீபத்தில் லைபீரிய சட்டமன்றம் இரண்டு மசோதாக்களை பரிசீலித்து வருகின்றது. அவை
ஓரினத்திருமணம் மற்றும் ஓர் பாலின உறவு பற்றியதாகும். இச்செயற்பாடானது மற்ற
லைபீரியர்களையும் ஒரே பாலின உறவூக்கு ஊக்குவிப்பதாகவுள்ளது. The Office of the High
Commissioner for Human Rights (OHCHR) அறிக்கையின் படி இவ் மசோதாக்கள் செனட்டில் நிறைவேற்றப்பட்டு பிரதிநிதிகள்
சபையின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.
ஐ.நா சபை இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்ததோடு இவை HIV/ AIDS போன்ற
பாலின நோய்கள் மற்றும் பாலின வன்முறைகளைத் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஒரு
பாலின திருமணத்திற்கு எதிரான இயக்கங்களும் லைபீரியாவில் உருவாகியது
குறிப்பிடத்தக்கது.
இவ்வாராக சமகால லைபீரியா பல சவால்களை எதிர்கொள்கிறது.
10. முடிவுரை
லைபீரியாவில் 14 வருட கால யுத்தம் பல்லாயிரம்
உயிர்களையும், பல பில்லியன் கணக்கான சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளது. 1994 இல் ஏற்பட்ட யுத்தத்திற்குப் பின்னரான
அபிவிருத்தி சரிவர மேற்கொள்ளப்படாமையால் மீண்டும் ஒரு யுத்தம் உருவானது. ஆனால்
இரண்டாம் கட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் ஏற்கனவே விட்ட பிழைகளைக்கொண்டு
உருவாக்கப்படாமல் சரியாகவும், நிதானத்துடனும் உருவாக்கப்பட்டது. 2003 இல் CPA கைச்சாத்திடப்பட்ட பின் பல்வேறு
மாற்றங்கள் லைபீரியாவில் உருவானது.
லைபீரியாவில் ஏற்படுத்தப்பட்ட DDRR செயன்முறை உலக நாடுகளுக்கு உதாரணமான ஒரு
சிறந்த செயன்முறையாக காணப்படுகின்றது. இவ் ஏற்பாடுகள் குறைந்த வருடத்தில் கூடுதல்
வெற்றியைத்தந்தது. இதற்கான முழுப்பெருமையும் ஐக்கிய நாடுகள் சபையையே சாரும்.
நடைமுறையில் சில பிரச்சினைகளை லைபீரிய அரசு எதிர்கொண்டாலும் அது பல்வேறு
அபிவிருத்திகளை அனுபவித்து வருவது லைபீரியாவின் வெற்றியாகும்.
Comments
Post a Comment