Posts

Showing posts from 2014
Image
பனை எண்ணெய் (Palm oil) பயங்கரம்! கா லை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம...
Image
தமிழ் மொழியுரிமை நடைமுறையில் சாத்தியமாகாமைக்கான காரணம் என்ன?  இலங்கை அரசியலமைப்பின் கீழ் இந்நாட்டில் தமிழ் மொழிக்கான  நடைமுறைச் செயற்பாட்டு  உரிமைகள் எவையெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.  ஆனால் நாட்டின் அதியுயர் வழிகாட்டியான குறித்த அரசியலமைப்பின் விதிமுறைகள் பயனற்றவையாக, பயன்படுத்தப்படாதுள்ளவையாக இருப்பதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாத்து அதன் வழிகாட்டலுக்கிணங்க செயலாற்றுவோம் என்று உறுதியுரை மேற்கொண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அரசியல் நிர்வாக அமைப்புகளாகட்டும் அரச அலுவலராகட்டும் தாம் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்தின் படி நடப்பதாகத் தெரியவில்லை. இது யதார்த்த நிலை.   அரசியலமைப்பின் ஒரு அங்கமாகவுள்ள மொழியுரிமை பற்றிய அத்தியாயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றமை, புறக்கணிக்கப்படுகின்றமை அரசியலமைப்பை மதியாத் தன்மையாகவே நோக்கப்பட வேண்டியது. நாட்டின் வழிகாட்டியாகவுள்ள அரசியலமைப்பை மீறிய, மீறிச் செயற்படும் குற்றத்திற்காளாகும் நிலையுள்ளது.  ஆனால் அரசியலமைப்பைப் பேண வேண்டியது பற்றி உரக்கக் குரல் கொடுக்கும் அரசியலமைப்...
Image
அநாகரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் தபால் தலை...  அ நாகரிக தர்மபாலவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர். தர்மபாலவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்' என்றார். தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலவுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர். இலங்கையில் சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று முன்னெடுக்...
Image
ஜனாதிபதியின் அதியுச்ச அதிகாரங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துமா? இலங்கையின் நடைமுறை அரசியல் யாப்பு ஒரு அலசல் பார்வை  நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை ஏற்படுத்திய 2ஆம் குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகளவிலான அதிகாரங்களைக் குவித்துள்ளது. முதலாம் குடியரசு யாப்பில் பிரதமர் பெற்றிருந்த உண்மை அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருந்த பெயரளவு அதிகாரங்களையும் ஒருங்கே கொண்டதாக 2ஆம் குடியரசு யாப்பின் ஜனாதிபதிப் பதவி விளங்குகின்றது.   நிறைவேற்றுத்துறையில் மட்டுமன்றி சட்ட மற்றும் நீதித்துறைகளிலும் ஜனாதிபதி பெற்றுள்ள அதிகாரங்கள் உலகில் ஜனாதிபதி ஆட்சி முறைக்குச் சிறப்பித்துக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமென விமர்சிக்கப்படுகின்றது.   யாப்பின் முதலாம் அத்தியாயத்தின் 4(ஆ) பிரிவு "இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட வேண்டும்' என்கிறது. யாப்பின் 30(1) பிரிவு "இலங்கைக் குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன் அவர் அரசின் தலைவரும் நிறைவேற்றுத்துற...
Image
  Happy Muharram   "The best of fasting after Ramadan is fasting Allah's month of muharram" [muslim]
Image
அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார வல்லரசாகியது சீனா..!!  142 வருட U.S ஆதிக்கம் முடிவுக்கு வந்தது __________________________ __________________________ _ உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்காவின் கௌரவத்தை சீனா நூற்றாண்டுக்கு பின்னர் முதல்முறை வீழ்த்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத் தின் (ஐ.எம்.எப்.) புதிய தரவுகளின்படி சீன பொருளாதாரத் தின் மதிப்பு 17.61 டிரில்லியன் டொலர்களாக இருப்பதோடு அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 17.4 டிரில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1872 ஆம் ஆண்டு பிரிட்டனை பின்தள்ளி பொருளாதார வல்லரசாக மாறிய அமெரிக்கா மீண்டும் பின்தள்ளப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த தசாப்தத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் சீனாவின் பொருளாதார மதிப்பு 2019 ஆம் ஆண்டாகும்போது 26.98 டிரில்லியன் டொலர்களாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த காலப் பிரிவாகும்போது அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் இது 20 வீதம் அதிகமாகும். அதாவது குறித்த காலத்தில் அமெரிக்க பொருளாதார மதிப்பு 22.3 டிரில்லியன் டொலர்களாக இருக்கும். நுகரும் திறன் குறியீட்டின் அடிப்...
Image
E – Embrace with open heart I – Inspire with impressive attitude D – Distribute pleasure to all HAPPY EID MUBARAK
Image
இன்றைய நாளில் அன்று  (16-09-2000) நடந்தது என்ன? அன்று ஒருநாள் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே நினைத்திருக்கவில்லை. அன் று காலை 9.05 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு நோக்கிப் பறந்து சென்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், தேசிய ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அன்று காலை இறக்காமத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக மேலும் 14 பேருடன் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கொழும்பிலிருந்து 110 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அரநாயக்கப் பகுதியில் இருக்கும் “பைபில் றொக்” (Bibil Rock) மலைப்பகுதியின் மேலாக அந்த ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீர் விபத்துக்குள்ளானது. பலத்த வெடியோசையுடன் தீப்பிழம்பாக வானத்தில் வெடித்துச் சிதறியது. அமைச்சரும் அவருடன் பயணம் செய்த மேலும் 14 ப...
Image
             மின்னலும் சில உண்மைகளும்  ஒரு தடவை மின்னல் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தா க, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது. மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்ச...
Image
        உலகமும் சுதந்திர‌ நாடுகளும்! – அறிய வேண்டிய தகவல்கள்....  உலக நாடுகள் எத்தனை?  உலகத்தில் இன்றைய திகதியில் 196 நாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ( எனினும் தாய்வான் ஒரு தனி நாடாக பல அனைத்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த போதும் “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, தாய்வான் தனது நாட்டின் ஒரு மாகாணம் என உத்தியோக பூர்வமாக அறிவிப்பைக்கொண்டுள்ளது. )...   ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற நாடுகளின் எண்ணிக்கை :  192 நாடுகள் இதுவரை ஐ. நா சபையில் இடம்பெற்றுள்ளன. (1971 ஆம் ஆண்டில் தாய்வான் ஐ. நா சபையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது, எனினும் சீனாவின் தலையீட்டின் பெயரில் இப்போது சீன குடியரசின் கீழ் பதிவிலுள்ளது.) இறுதியாக 14 ஆனி (July) 2011 அன்று தென் சூடான் உறுப்பினராகியது. வத்திக்கான் இதுவரை ஐ. நா சபையில் உறுப்பினர் உரிமை கோரவில்லை.... உலகின் புதிய நாடு எது?  தென் சூடானே இன்றளவில் உலகின் புதிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 9/6/2011 ஒல் சூடானில் இருந்து சுதந்திர...
Image
முஸ்லிம் போராளிகள் ஜெயித்தனர்' அடிபணிந்தது  இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம்..! பலஸ்தீன் எங்கும் போர் வெற்றிக்கொண்டாட்டம்..! பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம் - அபூ ஸஹ்ரி, பேச்சாளர், ஹமாஸ் 1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம். 3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை விட்டு விட மாட்டோம். 5.- இந்த எமது அடைவு குத்ஸின் மிக விரைவான வெற்றியை கட்டியம் கூறுகின்றது அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .....அல்லாஹு அக்பர் .... அந்த ஒப்பந்தம் எப்படி என்பதை முன்னைய பதிவு இதில்.. இனைத்துள்ளேன் நண்பர்களே ..பார்களாம்...↓ 8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிக...
Image
அதிசய தகவல்கள்! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவ ர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான். 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும். 6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும். 7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். 8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. 9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்...