Posts

Showing posts from March, 2015
Image
14-ம் நூற்றாண்டில் 1,20,000 கி.மீ. பயணித்த  இ ஸ்லாமிய சாகசப் பயணி  இப்ன் பதூதா ரயில், கார், பஸ் போன்ற எந்த வாகனமும் கண்டுபிடிக்கப்படாத 14-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சாகசப் பயணி இப்ன் பதூதா, பயணம் செய்த மொத்தத் தொலைவு எவ்வளவு தெரியுமா? 1,20,000 கி.மீ. ஆப்பிரிக்கா, ஆசியா, அரேபியா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார். புனிதப் பயணம் அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் புனிய யாத்திரை பயணத்தை மொராக்கோவில் 1325-ம் ஆண்டில் அவர் தொடங்கினார். அந்தப் பயணம் பெரும் உத்வேகம் தரவே, இஸ்லாமிய நாடுகளுக்கு தொடர்ந்து அவர் பயணிக்க ஆரம்பித்தார். அவருடைய பயணத்துக்கு முடிவே விழவில்லை. கற்றறிந்த முஸ்லிமாக இருந்த அவரை அறிஞர்களும் ஆட்சியாளர்களும் சென்ற இடமெல்லாம் வரவேற்றார்கள். அவருடைய பயணங்கள் தரை வழியாகவோ, கடல் வழியாகவோ அமைந்தன. ஒட்டகங்களுடன் டாஞ்சியர் நகரில் இருந்து 1325-ல் இப்ன் பதூதா தன் பயணத்தைத் தொடங்கினார். ஒட்டகங்களில் பயணித்த ஒரு வணிகர் கூட்டத்துடன் கிழக்கு நோக்கிப் பயணப்பட்டார். அலெக்ஸாண்ட்ரியாவில் பாரோக்களின் கலங்கரை விளக்கத்தைப் பார்த்தார். அது பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள...
Image
தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மாமனிதர் -  அவுரங்கஸீப் அவுரங்கஸீப் அவர்கள் இந்து, சீக்கி மக்களுக்கு வரலாற்றில் ஒரு கொடூரமான ஆட்சியாளராகக் காட்டப்பட்டுள்ளார். அவுரங்கஸீப் 1618ம் ஆண்டில் பிறந்தார்கள். ஆக்ராவை ஆண்ட மன்னர் ஷா-ஜஹானுக்கு மகனாகப் பிறந்த அவுரங்கஸீப் அவர்கள் தந்தையின் குணங்களில் இருந்தும் வித்தியாசமானவராக இருந்தார். சிறு வயதில் அல்-குர்ஆன்,ஹதீஸ் ஆகிய துறைகளை ஆழமாகக் கற்றார்.அரபு,பாரசீகம்,சகாதாய்,துருக்கி ஆகிய மொழிகளில் அவருக்கு நிபுணத்துவம் இருந்தது. முகலாயப் பேரரசில் இஸ்லலாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற இலக்கு அவுரங்கஸீபின் மனதில் பதிந்திருந்தது. சட்டத்தின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவுரங்கஸீப் ஆட்சி பீடம் ஏற முன்னரும் அவரது தந்தையின் பல நடவடிக்கைகளோடு அவருக்கு இணக்கப்பாடு இருக்கவில்லை. தாஜ்மஹால் கட்டப்பட்டதை தன்னால் ஏற்றுக்கொள் முடியாது என்று அவர் பகிரங்கமாக கூறினார்.அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது பிள்ளையாவர்.. இவர...
Image
கடலுக்கு அடியில் நீர்வீழ்ச்சி  மொரீசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. . பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்தியப் பெருங்கடல்தான். . இப்பெருங்கடலின் எல்லைகளாக, தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே அவுஸ்திரேலியாவும் அமைந்துள்ளன. . இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீற்றர் ஆகும். . இந்நிலையில், இந்திய பெருங்கடலில் உள்ள மொரீசியஸ் அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. . இந்த சேட்டிலைட் புகைப்படத்தில், கடல் நீருக்கடியில் நீர்வீழ்ச்சி இருப்பதை காட்டுகிறது. கடலோரத்தில் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது. . இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக மிகவும் கூர்மையாக உற்றுப்பார்த்தால் காணமுடியும். .