Posts

Showing posts from June, 2014
Image
இலங்கையில் சிறுபாண்மையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொறு தேசிய அரசுகளினதும் கடமையாக உள்ளது. ஒரு சில அரசுகள் சிறுபான்மையினர் தொடர்பில் கரிசனை கொண்டாலும் இன்னும் சில அரசுகள் அம்மக்கள் குழுவுக்கு எதிரான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகின்றது. சமூக, அரசியல், பொருளாதாரப் பரப்பில் அதிகாரம், அந்தஸ்து மற்றும் சலுகைகள் அல்லது முன்னுரிமைகள் குறைந்த ஒரு மக்கள் வகுப்பினரையே சிறுபான்மையினர் என அழைக்கிறோம். இவ்வாறாக ஏனைய நாடுகளைப் போல இலங்கையிலும் குறிப்பாக இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை முகம்கொடுத்து வருகின்றனர். அவற்றை இனி விரிவாக ஆராய்வோம். இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிநோக்கும் பிரச்சினைகள்   இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் தற்காலத்திலும் பல்வேறு சவால்களை சமுக, பொருளாதார, அரசியல் ரீதியில் எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிரான உணர்வுகள் காலன...
பாகிஸ்தானின் இராணுவ ஆட்சி பொதுவாக உலகின் முக்கிய பிராந்தியங்களின் ஆதிக்கவாத அரசியலில் முனைப்படைந்து காணப்படும் இராணுவ பரிமாணம் தென்னாசியாவைப் பொருத்தவரையிலும் விதிவிலக்கானதாக அமையவில்லை. இவ் இராணுவ பரிமாணம் தென்னாசியாவில் ஒருசில நாடுகளுக்கு விசேடமானதாக நடைமுறையில் இருந்தாலும் எல்லா நாடுகளிலும் இராணுவ ஆதிக்கம் ஒரு வகையில் நிலவாமல் இல்லை. அரசியலிலோ அல்லது ஆட்சித்துறையிலோ இராணுவத் தலைமையும் பணிக்குழுவும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும்போது அங்கு சட்டமியற்றலும் சட்ட அமுலாக்கலும் இராணுவத்தின் அதிகாரத்துவம் ( MILITARY AUTHORITARANISM) காணப்படும் போது அதனை இராணுவ பரிமாணமாக புரிந்துகொள்ளலாம். பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஒப்பீட்டு அடிப்படையில் தென்னாசிய நாடுகளில் பாகிஸ்தானிலே நேரடி இராணுவ ஆட்சி முறைமை மிக உயர்வான அரசியல் கலாசாரமாக பேணப்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகவுள்ளது. பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திலிருந்து ஜனநாயக அரசியலமைப்பு ஆட்சி முறைமையை விட இராணுவ ஆட்சி முறையில் நாட்டங் கொண்டதாக விளங்கியது. பணிக்குழுவும் (Bureaucratic) அரசியல் கட்சிகளும் இராணுவத்தின் செல்வாக்குக்க...