
இலங்கையில் சிறுபாண்மையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொறு தேசிய அரசுகளினதும் கடமையாக உள்ளது. ஒரு சில அரசுகள் சிறுபான்மையினர் தொடர்பில் கரிசனை கொண்டாலும் இன்னும் சில அரசுகள் அம்மக்கள் குழுவுக்கு எதிரான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகின்றது. சமூக, அரசியல், பொருளாதாரப் பரப்பில் அதிகாரம், அந்தஸ்து மற்றும் சலுகைகள் அல்லது முன்னுரிமைகள் குறைந்த ஒரு மக்கள் வகுப்பினரையே சிறுபான்மையினர் என அழைக்கிறோம். இவ்வாறாக ஏனைய நாடுகளைப் போல இலங்கையிலும் குறிப்பாக இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை முகம்கொடுத்து வருகின்றனர். அவற்றை இனி விரிவாக ஆராய்வோம். இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் எதிநோக்கும் பிரச்சினைகள் இலங்கை அரசியலில் சிறுபான்மையோர் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் தற்காலத்திலும் பல்வேறு சவால்களை சமுக, பொருளாதார, அரசியல் ரீதியில் எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிரான உணர்வுகள் காலன...