நீண்ட கால சமூக மோதல் பற்றிய Edward Azar  இன் கோட்பாடு.
Protracted Social Conflict (PCS)

நீண்ட கால சமூக மோதல் பற்றிய கோட்பாடு எட்வர்ட் அசார் இனால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். இனவாத குழுக்களுக்கிடையில் பாதுகாப்பு, அங்கீகாரம், ஏற்றுக்கொள்ளுதல், அரசியல் நிறுவனங்களை இயக்குதல், பொருளாதார பங்கேற்பு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நீடித்த வன்முறை போராட்டம் இடம்பெறுகிறது.

இனவாத குழுக்கள் குல, மத, கலாசார மற்றும் இனத்துவ அடிப்படையில் ஆழ வேரூன்றி பிளவுபட்டு காணப்படுகிறது. இந்த பிளவானது திடீர்த்திடிரென வன்முறைகளை தோற்றுவிப்பதுடன் அது வாழ்நாள் முழுவதும் வெளிப்படும் ஒன்றாக காணப்படுகிறது. இதன் காரணமாக மனிதத் தேவைகளான பாதுகாப்பு, அங்கீகாரம், பங்கீட்டு நீதி என்பவற்றில் அதிதிருப்தி ஏற்படுகிறது. இத்தகைய அடையாள இயங்கு நிலையானது அடக்குமுறை படுகொலைக்கு வழிவிடுவதோடு ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் மக்களின் அணைத்து உரிமைகளையும் உயரடுக்கினர் இயக்கும் நிலை உருவாகும்.


வன்முறை முரண்பாட்டுக்கான முன் நிபந்தனைகள்

சமூகங்களின் இனவாத, அடையாள அடிப்படையிலான அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவதால் அல்லது திருப்திஇல்லாமல் போகும் போது நீண்ட கால சமூக மோதல் ஏற்படுகிறது. அசார் நான்கு முன் நிபந்தனைகள் இவற்றுக்கு காரணம் எனக் கூறுகின்றார்.

1.        இனத்துவ உள்ளடக்கம் (Communal Content)
2.        பற்றாக்குறையான மனித தேவைகள்  (Deprivation of human needs)
3.        அரசாங்கம் மற்றும் மாநிலங்களின் பங்கு (Governance and state role)
4.        சர்வதேச இணைப்புகள் (International Linkage)

இக்காரணிகளுடன் இணைத்து காலனித்துவ மரபு வழி, உள்நாட்டு வரலாற்று பின்னணி, பன்மைத்துவ சமூகத்தின் இயல்பு என்பனவும் காரணம் என அசார் கூறுகின்றார்.



இனத்துவ உள்ளடக்கம் (Communal Content)

நீண்ட கால சமூக மோதலை வழிநடத்திச்செல்லும் மிக முக்கியமான காரணி இனவாத கலவை ஆகும். காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சிக் கொள்கையின் படி அந்நாடுகளில் காணப்பட்ட பல இனவாத சங்கங்களுக்குள் பிளவை உண்டாக்கினர் என அசார் கூறுகின்றார். இது ஒரு குழுவின் மீது மற்றக்குழு ஆதிக்கம் செலுத்துவதை உருவாக்கியது. அரசுகள் பொதுவாக குறிப்பிட்ட இனக்குழுவின் தேவைகளை பூர்த்தி செய்யாதுவிடின் அவ்வினக்குழு கூட்டணி ஆதிக்கம் கொண்டவர்களாகவும் மாறுவர். பின்னர் ஏற்படும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகள் இனங்களை துண்டாக்குவதோடு நீடித்த சமூக மோதலையும் உருவாக்கும்.

பற்றாக்குறையான மனித தேவைகள்  (Deprivation of human needs)

மனிதத் தேவைகளான பாதுகாப்பு, அபிவிருத்தி, அரசியல் இயக்கப்பாடு, கலாசார மற்றும் மத வெளிப்பாட்டுக்கான இனத்துவ அடையாளங்கள் நிறைவேற்றப்படாத போது மக்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உட்படுவர். இம்மாற்றத்தின் வெளிப்பாடாக வன்முறை மோதல் உருவாகும்.
இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் செய்ய அரசாங்கமானது பலதரப்பட்ட மட்டங்களையும் கருத்திற்கொண்டு பாதுகாப்பு விடயங்களை யாப்பின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மற்றும் மாநிலங்களின் பங்கு (Governance and state role)

அரசாங்கம் சமுதாயத்தினை இயக்கவும், குடிமக்களை பாதுகாத்து கூட்டு நலன்களை வழங்க அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றது. சிறுபான்மையினரின் அடையாளம் திருப்தி அளிக்காமை அல்லது பற்றாக்குறையான திருப்திக்கு அரசானது முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.இவ்வாரான செயற்பாடுகளினால் இனத்துவ குழுக்கள் நாட்டுக்குள் அல்லது ஆள்புலத்துக்குள் தமது ஏகபோக அதிகாரத்தை செலுத்தக்கூடியதாக காணப்படும். இவ்வாறான நிலமை குறிப்பிட்ட நாட்டுக்குள் சட்ட நெறுக்கடியை உருவாக்குகிறது. இதற்கான தீர்வு பற்றி அசார் கூறும் போது இந்த அரசாங்கங்களின் அமைப்புக்களை மாற்றுவதுடன், குடிமக்கள் சமமாக அக்கறை கொள்ளப்பட்டும் சமமாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டும் ஊழலற்ற நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும். என்பதாகும்.


சர்வதேச இணைப்புகள் (International Linkage)

சர்வதேச இணைப்புக்களில் அரசியல், பொருளாதார உறவுகள், சர்வதேச பொருளாதார முறைமை, அரசியல் இராணுவ இணைப்புக்கள் பிராந்திய மற்றும் பூகோள வாடிக்கையாளர் மாதிரி, எல்லை தாண்டிய நலன்கள் தொடர்பு படுகின்றன. பலவீனமான அரசுகளே பெரும்பாலும் நீண்டகால சமூக மோதலில் ஈடுபடுகின்றன. இந்த நாடு தனது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய போர்தளவாடங்களை பெற சர்வதேச இணைப்பையே நாட வேண்டியுள்ளது.

நீண்ட கால சமூக மோதல்

இலங்கை

இலங்கையில் 2001-1981 கணக்கெடுப்பின் படி 74% பௌத்தரும் 18% தமிழரும் வாழ்கின்றனர். தமிழர்களில் பெரும்பான்மையினர் வடக்கு, கிழக்கிலேயே வாழ்கின்றனர். அவர்களின் பாரம்பரிய தாயகமாகவும் வட கிழக்கை ஏற்றுள்ளனர். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இலங்கையர் ஆட்சியை பெற்ற போது தமிழ், சிங்கள இயக்கங்களுக்கிடையே பூசல் காணப்பட்டது. சிங்கள பேரினவாதத்தினர் மத்தியில் தமிழ் விரோத நடவடிக்கைகள் பரவின. தமிழர்கள் மேலும் மேலும் பின்தள்ளப்பட்டனர். இந்த நிகழ்வு 1983 இல் ஜூலை கலவரமாக வெடித்ததுடன் ஒரு போருக்கு வழிவிட்டது. தமிழர்கள் தங்களுக்கான பாதுகாப்பான வழியாக தனிமாநில அமைப்பை கோரினர் அதன் பின் இடம்பெற்ற போரினால் மிகப்பெரும் அழிவுகள் ஏற்பட்டது.அரசங்கத்திற்கு எதிராக LTTE (Tamils) போரிட்டது. மோதலுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்ற இவர்கள் கோரிக்கை ஒரு நீண்ட கால சமூக மோதலை உருவாக்கியது.

சைப்ரஸ் தீவு

சைப்ரஸ் தீவு சுதந்திரமடைவதற்கு முன்னர் கிரேக்க மற்றும் டர்கிஷ் சமூகங்கள் அமைதியாக இருந்தது. 1960 இல் சுதந்திரத்தின் பின் பாரிய முரண்பாடு ஆரம்பமானது. கிரேக்க சமூகம் கிரேக்கத்துடன் கூட்டினைய விரும்பியது. இதனை டர்கிஷ் சமூகம் எதிர்த்தது. 1960 இல் அரசியல் அமைப்பில் ஏற்படுத்திய அதிகார பகிர்வு ஒரு சிக்கலான முறையை கொண்டு வந்தது. கிரேக்க சைபீரிய கலகக்காரர்கள் டர்கிஷ் சைபீரிய கலகக்காரர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும் என்றனர். இதனால் இரண்டு சமூகங்களுக்குள்ளும் குழுக்களுக்கிடையிலான வன்முறை உருவாகியது. இதனால் இரு சமூகங்களுக்குள்ளும் நீடித்த பிரிவினை உருவாகியது.

1974 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சி இந்த நிலைமையை மேலும் சிக்களுக்குள்ளாக்கியது டர்கிஷ் இராணுவம் தீவின் வடக்கு பகுதியில் 38% பகுதியை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்பு 160,000 கிரேக்க சைபீரிய கலகக்காரர்களை தெற்குக்கு இடம்பெயர வைத்தது 40,000 டர்கிஷ் சைபீரிய கலகக்காரர்கள் வடக்குக்கு வந்தனர். 1975 இல் வடபகுதி Turkish Federal State ஆக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த முரண்பாடு தீர்க்கப்பட நீண்ட காலம் தேவைப்பட்டாலும் இன்னும் தெளிவான முடிவு இல்லை. மேற்கூறிய நாடுகளைப்போல நீண்ட கால சமூக மோதல் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்றது இவ்வாறாக அரபு இஸ்ரேல் மோதல், காஷ்மீர் மோதல், ஈராக்கிய அரசாங்கத்திட்கும் குர்திஸ் இனக்குழுக்களுக்கும் இடையிலான மோதல், ரஸ்ய அரசங்கத்திற்கும் செச்சன் கலகக்காரர்களுக்கும் இடையிலான தனிநாடு கோரும் சமூக மோதல் என்பவற்றைக் கூறலாம். இவ்வாறான நீண்ட கால சமூக மோதல்கள் தனிநாடு உருவாகும் நிலையை தோற்றுவிக்கும்.
உதாரணம்:- எத்தியோப்பியா நாட்டில் இருந்து இவ்வாறான சமூக மோதல் மூலமே எரித்ரியா நாடு உருவாகியது என அசார் கூறுகின்றார்.

 Resolving Protracted Social Conflict

அசார் கூறும் PCS தீர்வு யோசனை:- மோதல்கள் மூலமே அடையாள மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றன நீடித்த சமூக மோதல் அதில் உள்வாங்கினால் நீங்குவது கடினமாகும் இதற்கான முடிவை அடைய முயற்சி செய்வது பாரிய செயற்பாட்டுக்கு உட்பட்டது.

நீடித்த சமூக மோதலை முடிவுக்கு கொண்டு வர முரண்பட்ட கட்சிகளை இணைத்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.




   ஆக்கம்:- 
மீஸா பேகம்

Comments

Popular posts from this blog