
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் அணிசேரா அமைப்பும் சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப்பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. நவீன அரசுகள் தங்களது வெளிநாட்டு கொள்கைகளை முன்னெடுக்க சர்வதேச அமைப்புகளில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்கின்றன. இன்றைய உலகில் பலநூறு சர்வதேச அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவை எதோஒரு வகையில் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுப்பதற்காகவும் தமது நாட்டின் தேசிய நலனை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது. இந்தவகையில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்புதான் “அணிசேரா நாடுகளின் அமைப்பு” ஆகும். அணிசேரா அமைப்பு அரசியல், பொருளாதரக்கொள்கைகளாக பொதுவுடைமை அணியினர் ரஷ்யா தலமையிலும் முதலாளித்துவ அணியினர் அமெரிக்கா தலைமையி...